Thursday, September 10, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - முன்னுரை

கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக நம் நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் கூட பங்கு சந்தை பற்றி பேசுவது ஒரு வழக்கமாக ஆகி விட்டது. பங்கு சந்தையில் முதலீடு செய்யாவிட்டால் அது ஒரு பெரிய இழுக்கு என்று கூட சிலர் நினைக்கும் அளவு பங்கு சந்தை பற்றிய ஒரு வித மோகம் நிறைய பேருக்கு இருந்தது என்னவோ உண்மை.

பங்கு சந்தையில் நல்ல லாபம் வரும் போது அனைவரும் சந்தோஷமாக ஏற்றுகொண்டார்கள். அப்போது கூட சிலர் இது சூதாட்டம் என்று சொல்லி கொண்டுதான் இருந்தார்கள். பணம் சம்பாதிப்பவர்களோ இது என் திறமை என்று சொல்லி கொண்டார்கள், இது ஒரு சூதாட்டம் என்று சொல்லிகொண்டிருந்தவர்களில் அநேகம் பேர் பணத்தை இழந்தவர்களாக இருந்தார்கள்.

உண்மையிலேயே பங்கு சந்தை சூதாட்டமா அல்லது நியாயாயமாக பணம் சமாதிக்கும் ஒரு வழியா? இது பற்றி ஒரு தெளிவு வேண்டும் என்றல் நாம் நிறைய விஷயங்களை அலச வேண்டியிருக்கும். பங்கு சந்தையின் அடிப்படையில் இருந்து ஆரம்பித்து அதிலுள்ள சாதக பாதகங்களை எல்லாம் அலச வேண்டியிருக்கும்.

அப்படி பட்ட ஒரு அலசலை நாம் இந்த தொடரில் மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாம் லாபம் ஈட்டினாலும் சரி நஷ்டம் அடைந்தாலும் சரி, அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டியது நமக்கு மிக மிக அவசியமானது. எனவே இந்த தொடரில் அது பற்றி அலசலாம்.

பங்கு சந்தை பற்றி பேச போகிறோம் என்றதும் இது ஒரு டெக்னிக்கல் சம்பந்த பட்ட ஒரு விஷயம் என்று நினைத்துவிட வேண்டாம். அடிப்படையில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக மேற்கொண்டு தெரிந்து கொள்வோம்.

ஆக நமக்கெல்லாம் தெரிந்த ஒரு வார்த்தை பங்கு சந்தை. பங்கு சந்தை என்றால் பங்குகளை விற்கும் இடம் என்று நம் அனைவருக்கும் தெரியும். "பங்கு" என்றால் என்ன? இது பற்றி வரும் நாட்களில் பதிவிடுகிறேன்.

No comments:

Post a Comment