Sunday, August 30, 2009

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 5

கடந்த பதிவில் OPEN விலையின் விளக்கம் பற்றி பார்த்தோம், அதில் OPEN மற்றும் HIGH, மேலும் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகள் பற்றி சொல்லி இருந்தேன், இதில் OPEN மற்றும் HIGH என்ற நிலையை ஒரே புள்ளியாக கொண்டு ஒரு பங்கு தனது வர்த்தகத்தை தொடங்கி தொடர்ந்து கீழே வந்தால் அந்த குறிப்பிட்ட HIGH புள்ளியை கடக்க முடியாமல் தினறுவதாகவும், அந்த குறிப்பிட்ட புள்ளியில் முக்கியமான தடைகள் இருப்பதாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும்,
மேலும் இந்த OPEN மற்றும் HIGH என்ற முக்கியமான புள்ளியை அந்த பங்கு மறுபடியும் மேலே கடந்தால் நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம் அதாவது தடையாக இருந்த புள்ளியில் தடையை பெற்று தொடர்ந்து மேலே உயரமுடியாமல் இது வரை தடுமாறி வந்த அந்த பங்கு இப்பொழுது அந்த தடையை உடைத்து முன்னேறுகிறது.

அப்படி என்றால் என்ன அர்த்தம்? அந்த பங்கின். சக்தி அதிகமாகி விட்டது என்றாகிவிடும், இதை நாம் உணர்ந்து கொண்டு அதற்க்கு தகுந்தார்ப்போல் நாம் நமது வர்த்தகத்தை அமைத்துக்கொள்ள வேண்டும், இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இதுவரைக்கும் நம்மை எளிதாக தோற்கடித்த நமது எதிரியை நாம் வென்றுவிட்டோம் என்று அர்த்தம் அதேபோல் இதுவரை இருந்து வந்த சக்தியைவிட அதிக சக்தியை பெற்று அடுத்து மேலே உள்ள புள்ளிகளை நோக்கி அந்த பங்கு செல்லப்போகிறது என்று அர்த்தம்,

இதுபோலவே OPEN மற்றும் LOW என்ற நிலைகளை ஒரே புள்ளியாக பெற்ற பங்குகள் அந்த குறிப்பிட்ட புள்ளியை கீழே கடந்தால் மேலும் சக்தியை இழந்து இன்னும் இன்னும் கீழே செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக கொள்ளலாம், இது போன்ற நிகழ்வுகளுக்கு வேறு சில விசயங்களும் துணை நிற்க வேண்டும் அவைகள் என்ன என்ன என்று நாம் TECHNICAL வகுப்பிற்குள் இன்னும் சற்று தூரம் சென்றபின் தேவையான இடத்தில் பார்ப்போம், சரி இப்பொழுது மீதமுள்ள் HIGH, LOW, CLOSE ஆகியவற்றின் விளக்கங்களை பற்றி பார்ப்போம்

HIGH என்ற புள்ளி

HIGH என்ற புள்ளியை பற்றி பொதுவாக அல்லது மேலோட்டமாக சொல்லவேண்டும் என்றால், ஒரு பங்கு அன்றைய தினத்தின் இறுதி வர்த்தக நேரம் வரை (அதாவது மணி 3.30 வரை) உயர்ந்த அல்லது தொட்ட அதிக பட்ச புள்ளியை குறிக்கும் ஒரு குறியீடு ஆகும்,

சரி இந்த குறியீடைப்பற்றி நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம், இதை ஒரு விளக்கத்துடன் பார்த்தால் இந்த HIGH புள்ளியின் முக்கியத்துவம் சற்று எளிதாக புரியும் மேலும் இந்த HIGH புள்ளி தான் நாம் TECHNICAL ANALYSING செய்வதற்கு அதிகமாகவும் அடிக்கடியும் பயன்படுத்தப்போகும் புள்ளியும் கூட ஆகவே இந்த புள்ளியின் முக்கியத்துவத்தை நீங்கள் எளிதாகவும் உங்கள் மனதில் ஆழமாகவும் பதிந்து வைத்துக்கொண்டு எப்பொழுதெல்லாம் நமக்கு தேவையோ அப்பொழுதெல்லாம் அனிச்சை செயலாக நமது முன் வந்து நிற்க இந்த விளக்கம் தேவையானது தான்,

அதாவது நமக்கு அநேக எதிரிகள் உண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த எதிரிகளில் அதிக பலம் வாய்ந்த எதிரிகளும் உண்டு பலம் குன்றிய எதிரிகளும் உண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள், இப்படி இருக்கும் நேரத்தில் நாம் ஒரு பயணத்தை மேற்க்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள், ஆகவே நமது பயணத்தின் இடையே எந்த எதிரியாலும் நாம் தாக்கப்படலாம், அப்படி தாக்குதலுக்கு உட்பட்டு நாம் வருசயாக வீழ்த்திக்கொண்டு வரும் எதிரிகள் அனைவரும் நம்மை விட பலம் குன்றியவர்கள் என்ற வரிசையில் வந்து விடுவார்கள்,

அதே நேரம் எந்த எதிரியாவது நம்மை வீழ்த்தி பின்னடைய செய்தால், நாம் இங்கு தோற்றவர்கள் ஆகிவிடுவோம், சரி சிறிது நேரம் கழித்து சற்று இளைப்பாறி உணவு உட்க்கொண்டு சக்தியை ஏற்றிக்கொண்டு கொஞ்சம் ஆட்க்களையும் சேர்த்துக்கொண்டு மறுபடியும் அந்த எதிரியை வீழ்த்த செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்படியும் நாம் அந்த எதிரியிடம் தோற்றுப்போனால் அந்த எதிரி நம்மை விட அதிக பலம் வாய்ந்தவன் என்று தானே அர்த்தம், இப்பொழுது என்ன செய்வோம் ஒன்று வீர சொர்க்கம் அல்லது பின்னோக்கிய பயணம், இது தானே நடக்கும்,

இதேபோல் தான் ஒரு பங்கின் அன்றைய தினத்தின் HIGH புள்ளி என்பது அப்படிப்பட்ட பலம் வாய்ந்த எதிரி, அன்றைய தினத்தில் அந்த எதிரியை சமாளிக்க முடியாமல் அதாவது அந்த புள்ளியை கடந்து மேலே செல்ல முடியாமல் தடுமாறி துவண்டு விட்டதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், ஆகவே அந்த புள்ளி அந்த பங்கின் முக்கியமான எதிரி, சரி இதை நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் இங்கே முக்கியம், அதைப்பற்றியும் பார்ப்போம்


இங்கே அந்த HIGH புள்ளி நமக்கு எதிரி இல்லை, அந்த பங்குக்கு தான் எதிரி, ஆனால் நமது எதிரி யார் என்று நீங்கள் யோசித்தீர்களா நமது எதிரி நீங்கள் நினைப்பது போல் அந்த பங்கு தான், அதே நேரம் அந்த பங்கு நமக்கு வருமானம் செய்து கொடுக்கும் நண்பனும் கூட, ஆகவே நண்பன் மற்றும் எதிரியின் பலம் பலவீனம் நமக்கு முக்கியம், அந்த வகையில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது நமது நண்பன் மற்றும் எதிரியின் எதிரியான HIGH புள்ளியை தான்,

இந்த HIGH புள்ளியை அடித்து நொறுக்கி பலவீனமாக்கி அந்த பங்கு மேலே கடந்தால் என்ன அர்த்தம், அந்த பங்கிற்கு அதிகம் பலம் வந்து விட்டதாக தானே அர்த்தம், ஆகவே அந்த பங்கின் ஒவ்வொரு தினத்தின் HIGH புள்ளியும் நாம் நன்றாக பார்க்க வேண்டிய முக்கியமான விஷயமாகும் ஏனெனில் அந்த புள்ளியை அடித்து நொறுக்கி மேலே சென்றால் அடுத்த எதிரியினால் வீழ்த்தப்படும் வரை அந்த பங்கின் பயணம் தொடரும், இப்பொழுது புரிகிறதா HIGH புள்ளி என்றால் எவளவு முக்கியம் என்று,

மேலும் ஒரு முக்கியமான விஷயம் அந்த பங்கு அன்றைய வர்த்தக நேர முடிவில் அந்த HIGH புள்ளியிலோ அல்லது அந்த புள்ளியின் வெகு அருகிலோ முடிவடைந்தால் அந்த HIGH புள்ளி அன்றைய தினத்தின் அந்த பங்கின் பலம் வாய்ந்த எதிரியாக கொள்ளமுடியாது, இதை ஒரு பக்கம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், சரி இங்கு நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் சந்தேகங்களை பின்னூட்டம் மூலம் கேளுங்கள், சந்தேகங்களுடன் தொடர்ந்தாள் குழப்பம் தான் வரும் ஆகவே உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்வது நல்லது,

சரி அடுத்து LOW என்ற புள்ளியை பற்றி பார்ப்போம்

LOW என்ற புள்ளியை பற்றி மேலோட்டமாக சொல்ல வேண்டுமானால் ஒரு பங்கு அன்றைய வர்த்தக தினத்தின் இறுதிவரை எந்த புள்ளி வரை கீழே சென்றது என்பதினை குறிக்கும் குறியீடு ஆகும், இதை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்,

அதாவது LOW புள்ளி என்பது அந்த பங்கின் மிக முக்கியமான நண்பன் என்று சொல்லலாம், இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் PETROL தீர்ந்து விட்ட வண்டிக்கு எந்த இடத்தில் பெட்ரோல் பங்க் தென்பட்டு பெட்ரோல் கிடைக்கின்றதோ அந்த இடம் தான் அந்த வண்டி மீண்டும் ஓடத்துவங்கும் STARTING POINT, அதுபோல தான் ஒவ்வொரு பங்குக்கும் அன்றைய தினத்தின் LOW புள்ளி STARTING POINT ஆகும், அங்கிருந்து உயர ஆரம்பித்து விடும் அப்படியானால் அந்த LOW புள்ளி எவளவு முக்கியமானது ?

பெட்ரோல் இல்லாமல் தவித்து ஒரு 10 கிலோ மீட்டர் நீங்கள் வண்டியை தள்ளிக்கொண்டு வந்ததாக எண்ணிக்கொள்ளுங்கள் அப்படி இருக்கும் உங்களுக்கு ஒரு இடத்தில் பெட்ரோல் கிடைத்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும், அது போல தான் ஒவ்வொரு பங்குக்கும் அன்றைய தினத்தின் LOW புள்ளி, அதே நேரம் வர்த்தக நேரத்தின் முடிவில் அந்த பங்கு அந்த LOW புள்ளிகளிலோ அல்லது அந்த புள்ளியின் அருகிலோ முடிவடைந்தால், அது பெட்ரோலே இல்லாத பெட்ரோல் பங்கை கண்டு பிடித்தது போல சக்தி மிக்கதாக இருக்காது இருந்தாலும் பெட்ரோல் பங்க பெட்ரோல் பங்க தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை, அதாவது அன்றைய தினத்தின் LOW புள்ளி LOW புள்ளி தான், புரிகிறதா !

Thursday, August 20, 2009

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 4

கடந்த மூன்று பதிவுகளாக TECHNICAL ANALYZINGகிற்கு தேவையான சில அடிப்படையான விசயங்களை பார்த்து வந்தோம், இப்பொழுது மேலும் சில விஷயங்களை பார்த்துவிடுவோம், அதற்க்கு முன் இந்த தொடரை படித்து வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் உங்கள் ஆதரவுகளை பின்னோட்டம் மூலம் தெரிவித்து வரும் வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி, உங்களின் தொடர் ஆதரவும், பின்னூட்டமும் மட்டுமே இன்னும் அநேக விசயங்களை செய்வதற்கு என்னையும், இந்த வலைதள உரிமையாளர்களையும் தூண்டும் அகவே தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த கட்டுரையை பற்றி அறியத்தாருங்கள், சரி விசயத்திற்கு வருவோம்,

இதுவரை நாம் பார்த்துவந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தும் மிக முக்கியமானதும் TECHNICAL ANALYZING பயில்வதற்கு அடிப்படையான விசயங்களும் ஆகும், இந்த விசயங்களை எப்பொழுதும் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள், அடுத்து சந்தையில் நடக்கும் சில முக்கியமான விஷயங்களைப்பற்றி பார்ப்போம், இப்பொழுது சொல்லும் இந்த விஷயங்கள் தான் TECHNICAL ANALYZE செய்வதற்கு நாம் பயன்படுத்தப்போகும் வரைபட உருவ அமைப்புகள் தோன்றுவதற்கு ஆதாரமான விஷயங்கள், அதாவது பங்கு சந்தையில் வர்த்தகம் தினமும் காலை மணி 9.55 க்கு தொடங்கி மாலை 3.30 க்கு முடிவடையும்,

இப்படி நடக்கும் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் அனைத்தும் காலையில் தொடங்கி (OPEN), மாலை வரை வர்த்தகமாகி இறுதியில் மாலை 3.30 அளவில் முடிவடையும் (CLOSE), இந்த இடைப்பட்ட நேரத்தில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளும் மேலும் (HIGH), கீழும் (LOW) நகர்ந்து இறுதியில் ஒரு குறிபிட்ட விலையில் முடிவடையும் (CLOSE), இப்படிப்பட்ட இந்த நகர்வுகளில் ஏற்ப்படும் மிக முக்கியமான புள்ளிகளான OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்தே நாம் TECHNICAL வரை படங்களை உருவாக்குகிறோம், உருவாக்குகிறோம் என்றால் நாம் உக்கார்ந்து வரைவதில்லை அதற்கென SOFTWARE உள்ளது,

ஆகவே இந்த முக்கியமான புள்ளிகள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை விளக்குவதும் முக்கியமாகிறது ஆகவே அதனைப்பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோம், இப்பொழுது சந்தையில் தினமும் ஒவ்வொரு பங்கிலும் உருவாகும் இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகள் அந்த பங்குகளின் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்குவதற்கு எப்படி பயன்படுகிறது என்பதினை பார்க்கலாம் அதாவது இந்த OPEN, HIGH, LOW, CLOSE பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம் அப்பொழுதுதான் TECHNICAL ANALYZING ஐ நாம் எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற கோணம் வரும்

அதாவது எட்டு சுரக்காய் கறிக்கு உதாவது என்று ஒரு பழமொழி இருக்கிறது இல்லையா, அது போல தான் TECHNICAL RULES ஐ அப்படியே பயபடுத்தினால் இங்கு உதவாது ஆகவே இதை வேறு ஒரு கோணத்தில் தான் அணுக வேண்டும், ஆகவே இப்பொழுது நாம் பார்க்கப்போகும் இந்த OPEN, HIGH, LOW, CLOSE பற்றிய விளக்கங்கள் மூலம் உங்களது கற்பனை கோணங்கள் மாறும் அதாவது ஒரு பொருளை பார்க்கும் விதம் மாறலாம், அதாவது ரோஜா செடியில் உள்ள முட்களை பார்த்து அழகான பூவின்

செடியில் கொடூரமாய் முட்கள் என்று நினைக்காமல், முக்கியமான பொருள்களுக்கு பாதுகாப்பு மிக அவசியம் என்பதை இயற்க்கை நமக்கு எப்படி இந்த ரோஜா செடியில் இருக்கும் முட்கள் மூலம் புரியவைத்துள்ளது என்று பாசிட்டிவாக எண்ணிக்கொண்டு அதிலிருந்து நமது வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை பயன்படுத்துவது போல உங்கள் கோணம் மாறவேண்டும் அதன் பொருட்டே இந்த விளக்கம்,

கவனமாக படியுங்கள், புரியவில்லை என்றாலும் மறுபடியும் மறுபடியும் விடாதீர்கள் நானா நீனா என்று பார்த்து விடுங்கள் ஏனெனில் புரிந்து கொண்டு செல்வது முக்கியம் இல்லையேல் இந்த முயற்ச்சியே தோல்வி அடையும் ஆகவே புரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதே நல்லது, சரி இப்பொழுது ஒவ்வொன்றாக பார்ப்போம், அதாவது இந்த OPEN, HIGH, LOW, CLOSE மூலம் அந்த பங்குகள் நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை பார்க்கும் ஒரு முயற்ச்சியே, முதல் நாள் மாலை 3.30 க்கு முடிவடையும் ஒரு பங்கு அடுத்த நாள் சரியாக காலை 9.30 க்கு தொடங்கும்,

அப்படி தொடங்கும் போது பங்கு சந்தையில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளையும் வர்த்தகத்திற்காக திறந்து விடுவார்கள், (அந்த திறந்து விடும் நேரம் தான் 9.30 அப்படி வர்த்தகத்திற்காக திறந்துவிடப்படும் அனைத்து பங்குகளிலும் 9.30 மணியிலிருந்தே பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய கணக்குகள் வைத்து இருப்பவர்கள் அனைவரும்

வர்த்தகம் செய்யலாம்), அப்படி சந்தை வர்த்தகத்திற்காக திறந்தவுடன் முதலில் வர்த்தகமாகும் விலையே OPEN PRICE (துவக்க விலை) ஆகும், இந்த விலையை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்கப்போகிறோம்,

எப்பொழுதும் நேற்று முடிவடைந்த விலையிலே மறுநாள் எந்தப்பங்கும் வர்த்தகத்தை துவங்குவதில்லை, இதில் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் உள்ளது, அதாவது முந்தய பதிவில் நாம் பார்த்த BUS STAND உதாரணத்தில் ஒரு பொருளுக்கு இருக்கும் DEMAND ஐ பொறுத்து தான் அதன் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்று படித்து இருப்பீர்கள் இல்லையா, அந்த விஷயம் தான் பங்குசந்தையில் வர்த்தகமாகும் எந்த ஒரு பங்கினுடைய OPEN விலையையும் முடிவு செய்யும் மேலும் ஒரு பங்கு இன்று இந்த விலையில் தான் தொடங்கும் என்று கண்டுபிடிக்க எந்த விதமான TECHNICAL கூறுகளும் இங்கு (எனக்கு தெரிந்து) இல்லை,

மேலும் யார் முதலில் வர்த்தகத்தை தொடங்கி அந்த வர்த்தகம் நடந்து முடிகிறதோ அந்த விலைதான் அன்றைய தினத்தின் துவக்க விலை, இதை யார் வேண்டுமானாலும் நிர்ணயிக்கலாம் (அதாவது நீங்கள் நிர்ணயிக்கும் விலை வர்த்தகம் ஆகும் அனைத்து தகுதிகளையும் பெற்று இருந்தால் OPEN விலையை நிர்ணயித்த பாக்கியம் உங்களை சேரும்), ஆகவே இந்த OPEN விலையை எந்த TECHNICAL கூறுகளாலும் நிர்ணயிக்கமுடியாது என்ற சூழ்நிலையில் தானாக வரும் (யாராவது ஒரு TRADER மூலம்) இந்த OPEN விலை அனைத்து பங்குகளின் அன்றைய தினத்தின் INITIAL என்று சொல்லலாம் அதாவது கடவுளின் விலை என்று கூட வைத்துக்கொள்ளலாம்





சில பங்குகளில் அந்த பங்கை OPERATE செய்பவர்கள் அதன் அனைத்து விலைகளையும் முடிவு செய்வார்கள், ஆனால் நாம் அனைத்து பங்குகளையும் பற்றி பொதுவாக பேசிக்கொண்டிருப்பதால் அதை பற்றி தவிர்த்துவிடுவோம், சரி இந்த OPEN என்ற விலையின் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் அதாவது மாற்றுக்கோணம் என்னவென்றால்

OPEN PRICE

OPEN PRICE என்பது வெறும் ஒரு பங்கின் தொடக்க விலை மட்டும் இல்லை அன்றைய தினத்தின் அந்த பங்கின் வர்த்தக பாய்ச்சலை நிர்ணயிக்கும் முதல் புள்ளி, அதாவது அந்த பங்கில் வர்த்தகம் செய்ய நினைப்பவர்கள் அன்றைய தினத்தில் அந்த பங்கில் காட்டும் ஆர்வம் என்ன என்பதினையும், அந்த பங்கிற்கு உள்ள DEMAND என்ன என்பதினையும் சுட்டிக்காட்டும் முக்கியமான புள்ளியாக நாம் எடுத்துக்கொள்ளலாம், அந்த வகையில் இந்த புள்ளி முக்கியமானது,

சில நேரங்களில் சில பங்குகளில் OPEN மற்றும் HIGH என்ற இரண்டு நிலையும் ஒரே புள்ளியாக இருக்கும் அப்படி இருக்கும் போது தொடர்ந்து முன்னேற முடியாமல் அந்த குறிப்பிட்ட புள்ளியில் தடையை சந்தித்து கீழே வரும் என்று எடுத்துக்கொள்ளலாம், அதே போல் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகளையும் ஒன்றாக பெற்று இருந்தால் தொடர்ந்து கீழே இறங்க முடியாமல் அந்த குறிப்பிட்ட புள்ளியில் SUPPORT களை பெற்று தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம், ஆக வெறும் OPEN PRICE என்று எடுத்துக்கொள்ளாமல் இந்த புள்ளியை வைத்து அந்த பங்கின் நகர்வுகள் எதை நோக்கி இருக்கும் என்றும் நாம் அனுபவம் வர வர எளிதாக தெரிந்து கொள்ளலாம் ---

பயில்வோம் பங்குச்சந்தை- பாகம் 3

கடந்த பதிவில் TECHNICAL ANALYZING இன் தந்தை என்று வர்ணிக்கப்படும் திரு CHARLES DOW அவர்கள் பற்றி கொஞ்சம் பார்த்தோம், மேலும் அவர் TECHNICAL ANALYZING ஐ பின் தொடருபவர்கள் கண்டிப்பாக கவனம் கொள்ள வேண்டிய PRINCIPLES OF TECHNICAL ANALYZING இல் உள்ள மூன்று முக்கியமான தகவல்களில் இரண்டைப் பற்றி சற்று விரிவாக பார்த்தோம் மீதியை இப்பொழுது பார்ப்போம்,

கடந்த வாரம் இரண்டாவது விதியான “AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT)” என்ற தலைப்பின் கீழ் சந்தை எதனால் விழுகிறது என்று பார்த்தோம் மேலும் இது போன்று நடப்பதினால் சந்தையின் மீதே சந்தேகம் படும்படியான என்னம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இயற்க்கை தான், இருந்தாலும் அதற்கும் காரணம் உண்டு, அதாவது இது போன்ற உயர்வுகள் ஏற்படுவதற்கு காரணமாக அநேக விசயங்களை இங்கு பட்டியலிட முடியும், உதாரணமாக ஒரு சில விசயங்களை தருகிறேன்,

இது போன்று உயர்வதற்கு நமது ஆசையும் ஒரு காரணமே, அதாவது ஏதாவது ஒரு பொருளுக்கு DEMAND ஏற்படும் சூழ்நிலை வந்தால் எந்த ஒரு வியாபாரியும் எப்பாடுபட்டாவது அந்த பொருளை இப்பொழுது வாங்கி விட வேண்டும் பிறகு நல்ல லாபம் வரும் என்ற எதிர்கால யோசனையோடு வாங்க முனைவோம் இல்லையா அது போன்றுதான், இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு உதாரணத்துடன் சொல்லலாம்,

உங்கள் ஊரின் பேரூர்ந்து நிலையம் தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஒரு வசதியான இடத்திற்கு மாற்ற நகராச்சியில் ஒரு யோசனை உள்ளதாக வைத்துக்கொள்ளுங்கள், (இந்த யோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு (அரசாங்கம் உட்பட), நடை முறைக்கும் வரலாம் அதே நேரம் பேச்சளவிலே இருந்து நடக்காமலும் போகலாம் என்பதையும் மனதில் ஒரு பக்கம் வைத்துக்கொள்ளுங்கள்),

உங்களுக்கு நகராச்சியில் இந்த விஷயத்தை பற்றி பேசும் நபர்களில் ஒருவரோடு நல்ல தொடர்பு உள்ளது என்றும் வைத்துக்கொள்ளுங்கள், அந்த நண்பர் உங்களிடம் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்கிறார் என்றும் வைத்துக்கொள்ளுங்கள், மேலும் நீங்கள் சாதாரண ஒரு பிரஜை என்று இருந்தால் அந்த விசயத்திற்கு உங்களின் வெளிப்பாடு இப்படி இருக்கலாம் அதாவது அந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் அப்படியா வந்தால் நல்லது தான் இப்போ இருக்குற BUS STAND ரொம்ப இடைஞ்சலா இருக்கு புதிதாக வந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று சொல்லி விட்டு சென்று விடுவீர்கள்,

நீங்கள் சாதாரண நபராக இல்லாமல் ஒரு புத்திசாலியான வியாபாரியாக இருந்தால் எப்படி யோசிப்பீர்கள், இப்படித்தான் இருக்கும், ஆக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் BUS STAND வரப்போகிறது! இப்போ அந்த இடம் யாரும் சீண்டுவார் இல்லாமல் உள்ளது, BUS STAND வந்து விட்டால் அந்த இடங்களின் மதிப்பு எங்கோ சென்று விடும், ஆக இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் அங்கு நாலு ஏக்கர் நிலம் வாங்கிப்போட்டால் பின்னால் நல்ல காசு பார்க்கலாமே என்று எண்ணி உங்க்ளிடம் இருப்பதையும், மீதிக்கு கடனை உடனை வாங்கியாவது அங்கு நாலு ஏக்கர் நிலம் வாங்க யோசிப்பீர்கள், மேலும் வாங்கியும் விடுவீர்கள், பிறகு இந்த விஷயம் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்து ஒவ்வொருவருக்காக தெரிய ஆரம்பிக்கும்,

அப்படி வரும் போது உங்களைப்போல் எத்தினை புத்திசாலி வியாபாரிகள் இருப்பார்கள் ஆக அனைவரும் முண்டியடித்து வாங்க ஆரம்பிப்பார்கள் ஆக விலை ஜரூராக ஏற ஆரம்பிக்கும் முதலிலேயே நீங்கள் வாங்கி விட்டதால் இப்பொழுது உங்களுக்கு நல்ல லாபம் இருக்கும், அதே நேரம் அந்த இடத்தின் மதிப்பு உயர உயர தரகர்கள் என்ன செய்வார்கள் நில உரிமையாளர்களிடம் பேசி நல்ல விலைக்கு விற்று தருவதாக மேலும் விலையை ஏற்றி விடுவார்கள், இந்த தரகர்கள் மூலம் வெளியூரில் உள்ளவர்கள் கூட என்ன ஏது என்று தெரியாமல் நிலத்தில் தானே போடுகிறோம் என்று வாங்குவார்கள் இது போன்று அனைவரும் BUS STAND வரும் என்ற கோணத்தில் எங்கேயோ உள்ள நிலத்தின் விலையை எங்கேயோ ஏற்றி விடுவார்கள்,

இதில் உண்மை என்ன வென்றால் BUS STAND வந்த பிறகு இந்த நிலத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது, இருந்தாலும் முண்டியடித்து வாங்கி விடுவார்கள் (இப்பொழுது நீங்கள் வாங்கிய நிலத்தின் விலை நீங்கள் வாங்கியதை விட எங்கேயோ இருக்கும், அதே நேரம் நேற்று, அதற்க்கு முந்தய தினம் அந்த நிலங்களை வாங்கியவர்கள் உச்ச விலையில் தான் வாங்கி இருப்பார்கள் இல்லையா , சரி வாங்கி ஆகிவிட்டது, வாங்கியவர்கள் எல்லாம் எதற்காக வாங்கினார்கள் அது முக்கியம் இல்லையா அதாவது BUS STAND இந்த AREA வில் வரப்போகிறது என்ற யூகத்தினால், இப்பொழுது BUS STAND வந்தால் என்ன நடக்கும் வர வில்லை என்றால் என்ன நடக்கும் என்று பார்ப்போம் அது முக்கியம் இல்லையா,

சரி BUS STAND வந்து விட்டதாக வைத்துக்கொள்ளுங்கள், இதுவரை ஊகத்தில் இருந்த விஷயம் நடந்தே விட்டது அப்படியானால் விஷயம் வெளி வந்தவுடன் இதுவரை வாங்கியவர்கள் தங்களது விலைகளை அதிகமாக சொல்வார்கள், அதே நேரம் இன்னும் நிலம் வாங்காமல் விஷயம் வந்த பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்தவர்கள் எல்லாம் முண்டியடித்துக்கொண்டு வாங்க முர்ப்படுவார்கள் விளைவு விலை கண்ணா பின்ன என்று உயரும் ஆகவே அனைவருக்கும் முண்டியடிக்கும் ஆசை அதிகமாகும்,

அதே நேரம் இந்த BUS STAND இங்கு வந்ததினால் இந்த இடத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று மெல்ல சில அதி புத்திசாலிகளின் மனதில் ஒரு கேள்வி எழும், அவர்கள் அந்த விஷயம், இந்த விஷயம் என்று எல்லாத்தையும் கணக்கிட்டு இது தான் அதன் உண்மையான விலையாக இருக்கும் என்று ஒரு அனுமானத்திற்கு வருவார்கள் அப்படி வந்த பின் தற்பொழுது விற்றுக்கொண்டு இருக்கும் விலையையும் இவர்கள் கணக்கிட்ட விலையும் ஒப்பிட்டு பார்க்கும் போது விலை மிக அதிகமாக இருந்தால் மெல்ல யாருக்கும் தெரியாமல் விற்க ஆரம்பிப்பார்கள்,

ஆக முன்பை போலவே இந்த விசயமும் மெல்ல அனைவருக்கும் பரவ ஆரம்பிக்கும் ஆக அனைவருக்கும் தெரிந்தால் என்ன ஆகும் வந்த வரைக்கும் லாபம் என்று அனைவரும் விற்க ஆரம்பிப்பார்கள், அப்படியானால் உச்ச விலையில் இருந்த பொழுது வாங்கியவர்களின் நிலை என்ன ஆகும், நீங்களே யோசித்து பாருங்கள் இப்படித்தான் பங்கு சந்தையில் உச்சத்தில் இருக்கும் போது வாங்கியவர்களின் நிலைமை மோசமாகி விடுகிறது, சரி நாம் மேலே பார்ப்போம்,

முன்னால் நிலத்தின் விலையை கணக்கிட்டு இது தான் சரியான விலை என்று முடிவு செய்தவர்கள், அந்த குறிப்பிட்ட விலைக்கு கீழே அந்த நிலத்தின் விலை வந்தவுடன் மறுபடியும் விற்றதை மீண்டும் லாபத்துடன் வாங்க ஆரம்பிப்பார்கள் மறுபடியும் உயரும் நாளாக நாளாக அந்த நிலத்தின் மதிப்பு அந்த இடத்தில் உருவாகும் வியாபார வாய்ப்புகள் தேவைகள் இவற்றை பொறுத்து உயரவோ அல்லது வீழ்ச்சியடயவோ செய்யும், எப்படி பார்த்தாலும் BUS STAND உள்ள இடம் வியாபார வாய்ப்புக்களினாலும், தேவைகளினாலும் உயரத்தான் வாய்ப்புகள் உள்ளதால் முன்பு உச்சத்தில் வாங்கியவர்கள் பொறுத்து இருந்து லாபத்துடன் கொடுக்கலாம் அல்லது பயந்து பதட்டப்பட்டு முன்பே கொடுத்து நட்டம் ஆகியும் இருக்கலாம், அது அவர்களின் மன நிலையை பொறுத்தது,

சரி இப்பொழுது அங்கு BUS STAND வர வில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது என்ன நடக்கும்! வந்த வரைக்கும் போதும் என்று அடித்து பிடித்து விற்க ஆரம்பிப்பார்கள் முதலில் சில பேர் விவரம் தெரியாமல் வாங்கி மட்டிக்கொள்ளவும் செய்வார்கள்,( இங்கு BUS STAND வரவில்லை என்ற விவரம் தெரியாமல் தற்பொழுது இறங்கி வருகிறதே வாங்கி விடலாம் என்று புதிதாக வாங்கி மாட்டிக்கொள்ளவும் செய்வார்கள்(இப்படி தான் அதிகமானோர் குறிப்பிட்ட பங்குகளில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் "ஆகா நாம் எவளவு முயன்றும் வாங்க முடியாமல் விலை ஏறிய பங்கு இப்பொழுது இறங்கி உள்ளதே என்ன வேகமாக ஏறியது இந்த பங்கு அது மாதிரி மறுபடியும் ஏறினாலும் ஏறிவிடும் நாம் வாழ்க்கையில தவறு செய்யக்கூடாது வாங்கிப்போட்டு விட வேண்டும் என்று எதிர்பார்த்த விஷயம் நடக்காததினால் இறங்கிக்கொண்டு இருக்கும் பங்கை வாங்கி (ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள்) மாட்டிக்கொள்வார்கள்")

பிறகு விஷயம் அனைவருக்கும் தெரிந்த பின் விற்க ஆரம்பிப்பார்கள் அப்பொழுது என்ன நடக்கும் முன்னால் விற்ற விலையை விட கீழே கூட வந்து விடும் அப்பொழுது உச்சத்தில் வாங்கியவர்களின் நிலை என்ன நீங்களே முடிவு செய்யுங்கள், சரி இந்த மிக நீண்ட கதையில் பங்கு சந்தையை பொருத்தி பாருங்கள் தெளிவாக உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரியும், இங்கு நடந்த உயர்வு தாழ்வுகள் எல்லாம் ஒரு விஷயம் நடந்தால் (BUS STAND வரப்போகிறது) என்ன ஆகும் என்ற யூகத்தின் அடிப்படையில் நடந்தது, இதில் விவரம் தெளிவாக தெரிந்து வாங்கியவர்கள் அநேகம் பேர் அதே போல் விவரம் இன்னதென்றே தெரியாமல் வாங்கி மாட்டியவர்கள் அநேகம் பேர்,

இப்படித்தான் சந்தையிலும் நடக்கிறது இப்படி நிலத்தின் விலை தேவையில்லாமல் உயர்ந்ததுக்கும் மறுபடியும் விஷயம் நடக்க வில்லை என்றதால் வீழ்ந்ததுக்கும் யார் காரணம்? நம்முடைய லாபம் பார்க்கும் ஆசை தானே, இதே தான் பங்கு சந்தையில் நடக்கிறது, நான் சொன்னது ஒரு உதாரணம் தான் இது போல அநேக விஷயங்கள் உள்ளது, அனைத்து விசயங்களும் சில விளைவுகளை தரும் அந்த விளைவுகள் நல்லதாகவும் இருக்கலாம் கெட்டவயாகவும் இருக்கலாம், எது எப்படியோ நாம் பங்கு கொண்டால் அந்த விளைவுகளை நாம் அனுபவித்து தான் ஆகவேண்டும் இல்லையா,

சரி அதை விடுங்கள் இப்பொழுது நிலத்தின் விலை உயர்ந்ததுக்கு நம்முடைய லாபம் பார்க்கும் அதிக ஆசை காரணம், அதே நேரம் இந்த இடத்தின் உண்மையான கணக்கீட்டு விலை, தற்பொழுது விற்கும் விலையை விட குறைவு என்ற அளவு தெரிந்த பின் சந்தை தானாக கீழே வந்ததிற்கு நமது பயம் காரணம், இந்த விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை என்றதும் பழைய விலைக்கும் கீழே வந்ததிற்கும் நமது பயம் காரணம், ஆக சந்தை தன்னை எப்பொழுதும் சரியாகவே வைத்துக்கொள்ளும் அதே நேரம் தவறுதலாக ஏறி விட்டாலும் மறுபடியும் கீழே வந்து விடும் என்பது இந்த உதாரணத்தில் இருந்து உங்களுக்கு தெளிவாக தெரிந்து இருக்கும் இதை தான் DOW அவர்கள் “AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT)” என்று இரண்டாவது விதியாக சொல்லி இருந்தார் சரியா

மூன்றாவது விதி

PRIMARY TREND CAN NOT BE MANIPULATED

இந்த மூன்றாம் விதி முழுக்க முழுக்க TECHNICAL ANALYZING ஐ சார்ந்தது அதாவது ஒரு பங்கை ஆராய்வதற்கு அந்த பங்கின் விலைகளை வைத்து உருவாக்கப்பட்ட வரைபடத்தை தான் பயன்படுத்துவோம், அப்படி பயன்படுத்தும் போது அங்கு உருவாகும் உருவ அமைப்புகளில் இதுவரைக்கும் ஏற்ப்பட்ட LOW புள்ளிகளில் முக்கியமான இரண்டு புள்ளிகளை இணைத்து வரையப்படும் கோட்டினை இனி வரும் தினங்களில் அந்த பங்கில் ஏற்ப்படும் எந்த ஒரு பெரிய வீழ்ச்சியும் கடந்து கீழே செல்லாது என்பதினை தான் சொல்லி இருக்கின்றார், (இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் அது இப்பொழுது சொன்னால் சரியாக இருக்காது இனி வரும் காலங்களில் வரை படங்களுடன் தேவையான நேரத்தில் இதை சொன்னால் தான் நன்றாக புரியும் அப்பொழுது சொல்கிறேன், சரி அடுத்த பதிவில் சிந்திப்போம்

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் – 2

TECHNICAL ANALYSING என்பது சந்தையில் வர்த்தகமாகும் பொருளுக்கு சம்பந்தமில்லாத தனியான ஒரு வாய்ப்பாடு போன்றதில்லை, அது முழுக்க முழுக்க சந்தையில் வர்த்தகமாகும் பொருள்களுடன் உடலும் உயிருமாக பின்னிப்பிணைந்த சந்தையில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற நகர்வுகளே ஆகும், அந்த விஷயத்தைப்பற்றி பார்க்கும் முன் வேறு சில விசயங்களை நாம் தெரிந்து கொள்வது முக்கியமானதாகிறது, அதாவது, இந்த TECHNICAL ANALYSING இன் தந்தை என்று வர்ணிக்கப்படும் திரு CHARLES DOW என்ற அதி முக்கியமானவரின் சில கருத்துகளை நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது,

அதற்கு முன் CHARLES DOW அவர்களை பற்றி ஒரு சில வரிகளையாவது இங்கே சொல்ல வேண்டியது எனது கடமையாகும், கிபி சுமார் 1880 இந்த கால கட்டங்களில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்கள் பங்குகளின் விலைகளில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கங்களை சரியான முறையில் கணிக்க முடியாமல் முதலீடு செய்து தடுமாறிக்கொண்டிருந்த காலம், அந்த கால கட்டத்தில் அதாவது சுமார் 1884 என்ற ஆண்டுவாக்கில் திரு CHARLES DOW அவர்கள் சில குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளை தொகுத்து அந்த பங்குகளின் நகர்வுகளை வைத்து அந்த துறைக்கென தனியாக ஒரு குறிஈட்டை உருவாக்கினார் ( Industrial Average),

அவர் (CHARLES DOW) இந்த பங்கு சந்தை உலகத்திற்கு இது போன்ற மிகப்பெரிய பயனுள்ள அநேக செயல்களை கொடுத்து சென்றுள்ளார், மேலும் முக்கியமாக அவர் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்காக கொடுத்த விசயங்களை இன்று நாம் DOW THEORY என்ற பெயரில் பயன்படுத்துகிறோம், இந்த விசயங்களை வைத்து ஒரு பங்கில் எப்பொழுது ENTRY ஆகலாம் எப்பொழுது PROFIT BOOKING செய்யலாம் என்பன போன்ற விசயங்களை எளிதாக முடிவு செய்ய பயனுள்ளதாக இருந்து வருகிறது, மேலும் இந்த TECHNICAL ANALYSING கிற்கென்று முக்கியமான சில விதிமுறைகளை நமக்கு ஆராய்ச்சி செய்து கொடுத்துள்ளார், அந்த முக்கியமான விதிமுறைகளில் ஒரு சிலவற்றை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்….

PRINCIPLES OF TECHNICAL ANALYZING - BY CHARLES DOW


1-HISTORY REPETS IT SELF

2-AVERAGES ARE DISCOUNTS EVERY THING

(MARKETS ARE ALWAYS RIGHT)

3-PRIMARY TREND CAN NOT BE MANIPULATED

திரு CHARLES DOW அவர்கள் கொடுத்த முக்கியமான இந்த மூன்று விசயங்களை வைத்து சந்தையின் போக்குகளை நாம் TECHNICAL ANALYZING துணை கொண்டு எப்படி கணிக்க வேண்டும் என்பதினை நாம் அறிந்து கொள்ளலாம், இந்த விசயங்களை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்…

முதல் விதி:-

HISTORY REPEATS IT SELF

அதாவது பங்கு சந்தையை பொறுத்த வரை சந்தையில் முன்னர் நடந்த விஷயங்கள் தான் (உயர்வுகளும், வீழ்ச்சிகளும்) மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து வரும், அனால் வரும் முறைகளும், வழிகளும் வேண்டுமானால் மாறி இருக்கலாம், இதை இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமானால் ஒரு உதாரணத்துடன் சொல்லலாம், அதாவது மனிதன் இந்த உலகத்தில் தோன்றி ஓரளவு ஆறாவது அறிவு வேலை செய்ய தொடங்கியது முதல் போர் என்பது இருந்து வருவது நாம் அறிந்ததே, ஆனால் நாளாக நாளாக மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கற்களில் இருந்து இன்று அணு ஆயுதம் வரை மாறி வருவது நாம் அறிந்ததே, இன்னும் நாளாக நாளாக ஆயுதங்கள் மாறும் ஆனால் போர் என்ற ஒன்று மாறுவதில்லை,

அதாவது ஆயுதங்கள் மாறினாலும், காரண காரியங்கள் மாறினாலும் இருவருக்கோ அல்லது இரு நாட்டிற்கோ நடக்கும் போர் என்றும் மாறாது, இதே போல் தான் சந்தையில் உயர்வுகளும், தாழ்வுகளும் என்றுமே மாறாது அனால் எதனால் ஏறவேண்டும் அல்லது இறங்க வேண்டும், எவளவு தூரம் ஏறவேண்டும் அல்லது இறங்க வேண்டும் என்ற காரண காரியங்கள் வேண்டுமானால் மாறி மாறி வரலாம், அனால் உயர்வு தாழ்வுகள் என்றுமே பங்கு சந்தையில் உடலும் உயிருமாக இருந்து கொண்டே இருக்கும், இதைத்தான் "HISTORY REPEATS IT SELF" என்று திரு CHARLES DOW அவர்கள் சொல்லி இருந்தார், சரி அடுத்த விதியை பார்ப்போம்

இரண்டாம் விதி:-

AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT)

இந்த விதி மிக முக்கியமானது, சந்தை எப்பொழுதெல்லாம் மிகப்பெரிய சரிவுகளை சந்திக்கின்றதோ அப்பொழுதெல்லாம் இந்த கேள்வி நம் மனதில் எழும், ஏன் பங்கு சந்தை இவளவு தூரம் வீழ்ச்சியடைய வேண்டும்? இதற்கான காரணம் என்ன? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையை 1884 ஆம் ஆண்டு வாக்கிலே திரு CHARLES DOW அவர்கள் தனது ஆராய்ச்சியின் மூலம் இந்த பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்காக விட்டுச்சென்றுள்ளார், அதைப்பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்,

அதாவது பங்கு சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலைகளை நாம் அந்த பங்கின் இன்றைய சொத்து மதிப்புடன் (அசையும் மற்றும் அசையா சொத்துகளின் படி (இவ்விரண்டில் அந்த நிறுவனத்தின் அனைத்து விசயங்களும் அடங்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்)) ஒப்பிட்டுப்பார்த்தால் பங்குகளின் விலைகளில் அநேக ஒற்றுமயின்மையை நீங்கள் காணலாம்,

அதாவது உதாரணமாக ஒரு XYZ என்ற நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு 200 கோடி என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகள் 2 கோடி என்றும் வைத்துக்கொள்ளுங்கள், அப்படியானால் அந்த XYZ என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் உண்மையான விலை சரியாக 100 ரூபாய் என்று இருக்க வேண்டும், ஆனால் அந்த நிறுவனத்தின் பங்கின் விலை பங்கு சந்தைகளில் 100 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறதா என்று நீங்கள் பார்த்தல் அந்த விலையில் வர்த்தகம் ஆகாது அதற்க்கு பதில் ரூ 150/- என்ற விலையிலோ, அல்லது ரூ 200/- என்ற விலையிலோ கூட வர்த்தகம் ஆகலாம்,

ஏன் அப்படி சரியான விலையில் வர்த்தக ஆகாமல் குத்து மதிப்பாக இல்லாத விலையில் வர்த்தகம் ஆகிறதே, அப்படியானால் பங்கு சந்தை என்றால் ஏமாற்று வேலையா, இங்கு வியாபாரம் செய்வது சூதாட்டம் என்று சிலர் சொல்கின்றனரே அது உண்மையா, ஏகப்பட்ட பணத்தினை கைகளில் வைத்துள்ளவர்கள் முடிவு செய்து நிர்ணயிப்பது தான் பங்கு சந்தையா, இப்படி எல்லாம் உங்கள் மனதில் கேள்விகள் எழுகிறதா, இதற்கான உண்மையான காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றதா, அப்படி எனில் சற்று பொறுமையாக அடுத்த பதிவு வரை காத்து இருங்கள்.

பயில்வோம் பங்குச்சந்தை - 1

பயில்வோம் பங்குச் சந்தை - 1

பங்கு சந்தையில் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் மேலும் இன்னும் அதிகமானோருக்கு தெரியாமல் இருக்கும் TECHNICAL ANALYZING ஐ பற்றி விளக்கமாக பார்ப்போம்

முதலில் பங்கு சந்தையில் TECHNICAL ANALYZING ஏன் தேவைபடுகிறது என்பதினை பற்றிய விளக்கத்தை பார்ப்போம் …

பொதுவாக பங்குசந்தையில் பங்குகளின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் அதன் FUNDAMENTAL வளர்ச்சியை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது அதாவது

1- அந்த நிறுவனத்தின் வியாபாரம்

2- நிகர லாபம்

3- நிகர செலவுகள்

4-அவர்களுக்கு இனி வரும் மாதங்களில் கிடைக்கப்போகும் வியாபார வைப்புகள், அதனால் கிடைக்கப்போகும் வருமானம்

5-அந்த நிறுவனம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள்

6-அதன் நிர்வாக திறன்

7-நிறுவனம் கொடுக்கும் BONUS, DIVIDEND இது போன்ற சமாச்சாரங்கள் தான் நிறுவனத்தின் வளர்ச்சியை முடிவு செய்து அதன் பொருட்டு நிறுவனத்தின் பங்குகளின் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் முடிவு செய்யப்படும்

TECHNICAL ANALYZING ஏன் ?

இங்கு பங்குகளின் விலை ஏற்றங்களை முடிவு செய்யும் காரணிகள் FUNDAMENTAL விஷயங்கள் தான் என்றால் பிறகு ஏன் TECHNICAL ANALYZING என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும், முக்கியமான கேள்விகள் தான், அது ஏன் என்று பார்ப்போம்

1- விலைகளில் ஏற்ற இறக்கங்களை முடிவு செய்வது FUNDAMENTAL விஷயங்கள் தான் என்றாலும் அந்த விலை ஏற்ற இரக்கங்களின் பாதைகளை முடிவு செய்வதற்கு ஒரு சில தீர்க்கமான வழிகள் தேவைப்பட்டது

2- அந்த வழிகள் கீழ்கண்டவைகளை கண்டிப்பாக தர வேண்டும்

அதாவது

பங்கு சந்தையில் வர்த்தகமாகும் எந்த ஒரு பொருளும் ஏறுவதானாலும் சரி இறங்குவதனாலும் சரி அதை அந்த வழிகள் (TECHNICAL ANALYZING) தெரிந்து வர்த்தகம் செய்பவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்,

3- ஒரு பங்கு உயரும்போது எந்த புள்ளியை இலக்காக கொண்டு நகரும் என்று மிகச்சரியாக சொல்ல வேண்டும்,

4- உயரும் போது ஒரு வேளை ஏதாவது சூழ்நிலை அல்லது காரணங்களால் அந்த பங்கு கீழே வந்தால், எந்த புள்ளிகள் வரை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த TREND தாக்குப்பிடிக்கும் அதாவது அந்த பங்கின் S/L என்ன என்பதை எளிதாக சொல்லும் வழியாக இருக்க வேண்டும்,

5- பொதுவாக அந்த பங்கின் அசைவுகளை முழுவதுமாக சொல்ல வேண்டும், அவ்வாறு சொல்லும் விஷயங்கள் அனைத்தும் அதன் FUNDAMENTAL விசயங்களின் வெளிப்பாடாகவும், இனி வரும் காலங்களில் இந்த பங்கின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் சிறந்த வழியாக இருக்க வேண்டும்

6- FUNDAMENTAL ஆக ஒரு பங்கில் ஏதும் முக்கியமான விஷயங்கள் நடந்து அதனால் அந்த பங்கின் விலையில் குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயர்வு ஏற்ப்படும் என்ற சூழ்நிலை இருந்தால் அதை முன் கூட்டியே அந்த வழிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் முறையில் இருக்க வேண்டும்

7- பொதுவாக இன்னும் சொல்ல வேண்டுமானால் வெறும் அந்த வழிகளின் மூலம் மட்டுமே ஒரு பங்கின் ஆதி அந்தங்களை சொல்லும் ஒரு வழி முறையாக இருக்க வேண்டும்

இது போன்ற விசயங்களை நாம் முன்னர் பார்த்த FUNDAMENTAL கூறுகளை வைத்து கணிக்க முடியாது இல்லையா, ஆகவே தான் அதற்கும் மேலாக இன்னும் சரியாக சில விஷயங்கள் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு தேவைப்பட்டது,

மேலும் பங்கு சந்தைகளில் அன்று முதல் இன்று வரை பங்குகள் எல்லாம் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி மேலும் கீழும் பங்குகள் நகர்ந்து கொண்டே தான் இருக்கும் (அப்படி நகர்ந்தால் தானே அது பங்கு சந்தை), இப்படி தினமும் நொடிக்கு நொடி நகர வேண்டுமானால் அதற்க்கு என்று ஒரு வழிமுறை தேவைப்படும் இல்லையா,

அதாவது விளக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு பேரூர்ந்து சென்னையிலிருந்து திருச்சிக்கு கிளம்புகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்படி கிளம்பும் போது நேரடியாக சென்னையிலிருந்து பறந்து அடுத்த நொடியில் திருச்சியில் சேர முடியாது இல்லையா,

முதலில் திருச்சி சென்றடைய தேவையான அளவிற்கு பெட்ரோல் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும் வண்டியை பத்திரமாக ஓட்டும் ஓட்டுனரை நியமிக்க வேண்டும், பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பும் என்று முடிவு செய்து அதை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படுத்த வேண்டும், தேவையான பயணிகளை ஏற்றிக் கொள்ளவேண்டும், இடை இடையே இறங்குபவர்களையும் ஏற்றிக் கொள்ளவேண்டும் அவர்களுக்கான பயண சீட்டுகளை வழங்க வேண்டும், பிறகு மெல்ல தாம்பரம் வந்து அதற்கான சாலையை பிடித்து வருசயாக ஒவ்வொரு ஊராக கடந்து பிறகு திருச்சியை அடையவேண்டும் இப்படி தானே வந்து சேர முடியும் ,

அதுமாதிரி தான் TECHNICAL ANALYZING கும் அதாவது திருச்சிக்கு செல்லவேண்டும் என்பது FUNDAMENTAL விஷயமாகும் அதாவது ஒரு குறிப்பிட்ட ORDER கிடைப்பதின் மூலம் ஒரு நிறுவனத்திற்கு 1000 கோடி லாபம் கிடைக்கும் என்று இருப்பது FUNDAMENTAL விஷயம் அதே நேரம் இந்த லாபத்தினால் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கும் அதன் விலையில் இருந்து 60 ரூபாய் உயர வேண்டும் என்ற நிலை உருவாகும், அப்படி உருவாகும் போது, அடுத்த நொடியே அந்த பங்கின் விலையில் 60 ரூபாயை உயர்த்திக்காட்ட முடியாது இல்லையா,

அப்படி உயர்த்திக்காட்டுவது என்பது BUS ஐ சென்னையிலிருந்து அடுத்த நொடி திருச்சியில் இறக்குவதற்கு சமம் அப்படி செய்ய முடியாது இல்லையா, மேலும் நாம் முன்னர் சொன்ன முறையில் தானே BUS ஐ திருச்சிக்கு ஒட்டி வர முடியும், அவ்வாறு பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலையில் இருந்து எப்படி அடுத்த விலைக்கு கொண்டு வருவது என்பதினை TECHNICAL ANALYZING உதவி கொண்டு தான் செய்ய முடியும் அதாவது முதலில் எவளவு தூரம் அந்த பங்கின் விலையை ஏற்ற வேண்டும் பிறகு எவளவு தூரம் இறக்கவேண்டும் மறுபடியும் எப்பொழுது உயர்த்த வேண்டும் இப்படி எல்லாம் முடிவு செய்வதற்கு TECHNICAL ANALYZING பயன்படுகிறது.

OPEN INTEREST என்றால் என்ன?

OPEN INTEREST என்பது பொதுவாக FUTURE & OPTION மற்றும் COMMODITY வர்த்தகத்தில் பயன் படுத்தப்படும் ஒரு சொல், இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட FUTURE CONTRACT இன் போக்குகளின் தொடர்ச்சி (STRENGTH OF THE TREND), முடிவு (END OF THE TREND) மற்றும் அந்த குறிப்பிட்ட FUTURE CONTRACT இன் அடுத்தக்கட்ட நகர்வு (TREND REVERSAL), ஆகியவைகளை தெரிந்து கொள்ள பயன் படுத்தப்படும் ஒரு முக்கியமான INDICATOR ஆகும்.

பொதுவாக OPEN INTEREST என்பது ஒரு குறிப்பிட்ட வர்த்தக் தினத்தின் முடிவில் அன்று நடந்த வர்த்தகத்தில் இன்னும் முடிக்கப்படாத (SQUARE OFF பண்ணப்படாத அதாவது இன்று வாங்கி இனிவரும் நாட்களில் விற்கலாம் என்ற வகையில்) CONTRACT களின் எண்ணிக்கையை காட்டும் ஒரு அளவுகோல்.

OPEN INTEREST எப்படி உயருகிறது எப்படி வீழ்கிறது என்று பார்ப்போம்

பொதுவாக நாம் ஒரு பங்கினை வாங்குவது போல் அனைவரும் வாங்க வாங்க அந்த பங்கின் VOLUME உயரும் இல்லையா, அதே போல் தான் இந்த OPEN INTEREST லும் VOLUME உயரும் ஆனால் இதில் எப்படி நடை பெறுகிறது என்று பார்ப்போம்

முதலில் OPEN INTEREST உயருவதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்

அதாவது
ஒரு CONTRACT ஐ ஒருவர் உயரும் என்ற எண்ணத்தில், (ஏறியவுடன் லாபம் பார்க்கும் நோக்கத்தில்) வாங்குகிறார், இவர் வாங்கும் இந்த CONTRACT ஐ யாராவது ஒருவர் விற்று இருக்க வேண்டும் இல்லையா, அப்படி விற்பவர் ஏற்கனவே வாங்கி அதை லாபத்துடனோ அல்லது நட்டத்துடனோ விற்ப்பவராக இருக்கக்கூடாது , இறங்கும் என்ற எண்ணத்தில் புதிதாக SHORT SELL செய்பவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி உயரும், என்ன புரிய வில்லையா

ஒரு புதியவர் விற்று / மற்றொரு புதியவர் வாங்கினால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி உயரும்.

OPEN INTEREST வீழ்வதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்

அதாவது
ஒரு CONTRACT ஐ ஏற்கனவே வாங்கியவரும் (உயரும் என்ற எண்ணத்தில் BUY செய்தவர்), அதே போல் இறங்கும் என்ற எண்ணத்தில் ஏற்கனவே விற்றவரும் (SHORT SELL செய்தவரும்), ஒருவருக்கொருவர் தங்கள் பரிமாற்றங்களை (POSITION ஐ முடித்துக்கொள்லுதல்) நிகழ்த்திக்கொண்டால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி கீழே வரும்.

பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும் OPEN INTEREST இல் எந்தவிதமான மாற்றங்களும் நிகழாமல் இருக்கும் அது எப்படி என்று பார்ப்போம்

ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட CONTRACT இல் POSITION இல் இருப்பவர் புதிதாக இந்த CONTRACT இல் வர்த்தகம் செய்ய வருபவரிடம் விற்றாலும் அல்லது வாங்கினாலும் OPEN INTEREST இல் எந்த விதமான மாற்றங்களும் நிகழாது, இன்னும் புரிய வில்லை என்றால் கீழே உள்ள அட்டவணையை பாருங்கள் புரியும்

கீழ் கண்ட வகையில் வர்த்தகம் நடந்தால்

NEW BUYER - NEW SELLER = OPEN INTEREST அதிகமாகும்
OLD BUYER - OLD SELLER = OPEN INTEREST குறையும்
NEW BUYER - OLD BUYER = OPEN INTEREST எந்த வித மாற்றங்களும் இல்லை
NEW SELLER - OLD SELLER= OPEN INTEREST எந்த வித மாற்றங்களும் இல்லை

(ஏற்கனவே வாங்கியவர் புதியவரிடம் விற்றாலும், ஏற்கனவே விற்றவர் புதியவரிடம் வாங்கிலும் எந்த மாற்றமும் இலலை).

இப்போ புரிகிறதா!

சரி OPEN INTEREST ஐ பற்றி ஓரளவு திரிந்து கொண்டாகி விட்டது அடுத்து OPEN INTEREST இல் ஏற்ப்படும் மாற்றங்கள் அதனால் சந்தைகளில் ஏற்ப்படும் விளைவுகள் ஆகியவற்றை பற்றி பார்ப்போம்

ஏதாவதொரு FUTURE CONTRACT கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த உயர்வு தொடருமா என்பதை நாம் OPEN INTEREST இல் ஏற்ப்படும் சில மாற்றங்களை வைத்து முடிவு செய்யலாம்,

அதாவது
1- OPEN INTEREST தனது நிலையில் இருந்து மேலும் உயர்ந்து அதே நேரத்தில் அந்த FUTURE CONTRACT இன் விலைகளிலும் உயர்வு இருந்தால், இந்த FUT CONTRACT தொடர்ந்து உயரும் (அதாவது நிறைய புதியவர்கள் தொடர்ந்து இந்த FUT CONTRACT ஐ இன்னும் வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் புதிய முதலீடுகள் இங்கு நடக்கின்றது என்று அர்த்தம்), ஆகவே இந்த உயர்வு தொடரும், இப்படி இருக்கும் போது நாமும் வாங்கி விற்று வர்த்தகம் செய்யலாம்.

ஏதாவதொரு FUTURE CONTRACT கடந்த சில நாட்களாக வீழ்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த வீழ்ச்சி தொடருமா என்பதை நாம் OPEN INTEREST இல் ஏற்ப்படும் சில மாற்றங்களை வைத்து நாம் முடிவு செய்யலாம்,
அதாவது

2- OPEN INTEREST தனது நிலையில் இருந்து மேலும் உயர்ந்து அதே நேரத்தில் அந்த FUTURE CONTRACT இன் விலைகளிலும் வீழ்ச்சிகள் இருந்தால், இந்த FUT CONTRACT தொடர்ந்து கீழே வரும் (அதாவது நிறைய புதியவர்கள் தொடர்ந்து இந்த FUT CONTRACT ஐ இன்னும் விற்றுக்கொண்டு (SHORT SELL) தான் இருக்கின்றார்கள் என்று அர்த்தம்), ஆகவே இந்த வீழ்ச்சி தொடரும், இப்படி இருக்கும் போது நாமும் விற்று வாங்கி (SHORT SELL) வர்த்தகம் செய்யலாம்

ஏதாவதொரு FUTURE CONTRACT இல் குறிப்பிட்ட அளவுக்கு உயர்வு ஏற்ப்பட்ட பிறகோ, அல்லது குறிப்பிட்ட அளவு வீழ்ச்சிகள் ஏற்ப்பட்ட பிறகோ OPEN INTEREST இல் ஏற்ப்படும் கீழ் கண்ட மாறுதல்களை வைத்து, அந்த CONTRACT இன் அடுத்த கட்ட நகர்வுகள் (TRENT REVERSAL) எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கலாம்,

அதாவது
OPEN INTEREST இல் எந்த பெரிய மாற்றங்களும் (FLAT) இல்லாமலோ அல்லது சற்று குறைந்தோ இருந்து அந்த CONTRACT இன் விலைகளில் நிறைய மேலும் கீழுமான ஆட்டங்கள் (VOLATILE) இருந்தால் அந்த CONTRACT இது வரை தான் இருந்த TRENT இல் இருந்து தனது நிலையை வெகு விரைவில் மாற்றப்போகிறது என்று அர்த்தம், (அதாவது ஏற்கனவே POSITION இல் இருப்பவர்கள் தங்களது POSITION ஐ SQUARE OFF செய்கிறார்கள் என்று அர்த்தம், இப்படி இருக்கும் போது நாமும் நமது POSITION ஐ முடித்துக்கொள்ளலாம்.

இந்த அட்டவணையை பாருங்கள் இன்னும் புரியும்

PRICE==O.I==RESULT

UP==UP==MARKET STRONG

UP==DOWN==MARKET WEAK

DOWN==UP==MARKET WEAK

DOWN==DOWN OR FLAT==TREND REVERSAL

FIBONACCI RETRACEMENT ஒரு பார்வை

FIBONACCI என்று சொல்கிறோமே அவரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்

FIBONACCI என்பவர் கிபி1175 TO கிபி1250 களில் ஐரோப்பியாவில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கணிதமேதை,

இவர் பிறந்தது இத்தாலியில் உள்ள பிசா என்னும் இடத்தில்,

இவர் வாழ்ந்த காலத்தில் கணிதத்தில் மிகப்பெரிய மற்றும் நிறைய செயல்கள் செய்துள்ளார்,

இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவர் அன்று கொடுத்த விசயங்களை தான் நாம் இன்று பயன்படுத்துகிறோம்,

உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ROMAN NUMBERS ஐ சொல்லலாம், மேலும் நாம் பயன்படுத்தும் கூட்டல் கழித்தல் களில் கூட இவரின் வழிகட்டுதல்கள் உண்டு …..

இப்படி நிறைய விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்,



சரி நாம் TECHNICAL ANALYSING இல் பயன்படுத்திவரும் FIBONACCI RETRACEMENT LEVELS இல் வரும் 61.8%, என்ற அளவு எப்படி வந்தது மேலும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றியும் மற்றும் 23.6%, 38.2%, 50%, 76.4%, 85.4%, என்ற அளவுகள் எப்படி வந்தது மேலும் அவைகளின் முக்கியத்துவம் பற்றியும் பார்ப்போம்,



கிபி 1175 TO கிபி 1250 களில் வாழ்ந்த FIBONACCI அவர்கள் சில எண்களின் வரிசையை கண்டுபிடித்தார் ,

அதாவது முதலில் 0 வை எழுதிக்கொள்ளவேண்டும்

பிறகு அந்த 0 வுடன் 1 என்ற என்னை கூட்ட வேண்டும், 1 என்று விடை வரும்,

வந்த விடையுடன் முன்னாள் உள்ள எண்ணான 1 மீண்டும் கூட்ட வேண்டும், 2 என்று விடை வரும் அதனுடன், முன்னால உள்ள எண்ணான 1 ஐ கூட்ட வேண்டும் 3 என்று விடைவரும் அதனுடன் முன்னாள் உள்ள எண்ணான 2 ஐ கூட்ட வேண்டும் 5 என்று விடை வரும் அதனுடன், முன்னால உள்ள எண்ணான 3 ஐ கூட்ட வேண்டும் 8 என்று விடை வரும் அதனுடன், முன்னால உள்ள எண்ணான 5 ஐ கூட்ட வேண்டும் ,இப்படியாக முன்னாள் உள்ள என்னுடன் கூட்டிக்கொண்டே சென்றால், நீளமான எண்களின் வரிசை வரும் , அந்த வரிசைக்கு பெயர் தான் FIBONACCI SERIAL NUMBERS,

என்ன புரியவில்லையா , கீழே உள்ள எண்களின் வரிசையை பாருங்கள்

புரியும்



0- 1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987........



இப்போ புரியுதா , அதாவது இந்த வரிசையை பாருங்கள்,

முதலில் 0 வை எழுதிக்கொள்ள வேண்டும், பின் அதனுடன் 1 ஐ கூட்ட வேண்டும் வரும் விடையான 1 ஐ எழுதிக்கொள்ளவேண்டும் அடுத்து இந்த 1 என்ற என்னுடன் முன்னாள் உள்ள 0 வை கூட்ட வேண்டும், வரும் விடையான 1 ஐ எழுதிக்கொள்ளவேண்டும் அடுத்து இந்த 1 என்ற என்னுடன் முன்னாள் உள்ள 1 ஐ கூட்ட வேண்டும், வரும் விடையான 2 ஐ எழுதிக்கொள்ளவேண்டும் , இப்படியாக முன்னாள் உள்ள என்னுடன் கூட்டினால் அடுத்து அடுத்து எண்கள் கிடைக்கும் அவைகளை எழுதிக்கொண்டால் ஒரு வரிசை கிடைக்கும்,



அந்த வரிசைக்கு பெயர் தான் FIBONACCI SERIAL NUMBERS ஆகும்,

இவ்வாறு கண்டுபிடித்த எண்களை வைத்துக்கொண்டு FIBONACCI அவர்கள் சில விசயங்களை கண்டுபிடித்தார்,

அவர் கண்டுபிடித்த அந்த விஷயம் தான் அனைவராலும் இன்று கொண்டாடப்படும் GOLDEN NUMBER, OR GOLDEN MEAN எனப்படும் GOLDEN AVERAGE ஆகும் ,

இந்த என்னை தான் நாம் TECHNICAL ANALYSING இல் உள்ள FIBONACCI RETRACEMENT LEVELS இல் முக்கியமான நிலையாக பயன்படுத்துகிறோம்

( 61.8% ),

சரி அந்த FIBONACCI SERIAL NUMBERS இல் இருந்து இந்த முக்கியமான எண்ணான 61.8% ஐ அவர் எப்படி கண்டுபிடித்தார் என்பதை இப்பொழுது பார்ப்போம்,

அதாவது இந்த வரிசையில் உள்ள எண்களை ஒன்றுடன் ஒன்றை FIBONACCI அவர்கள் இரண்டு விதமாக வகுத்துக்கொண்டார் (DIVIDING)

இப்பொழுது அவர் செய்த இரண்டு வகுத்தல் முறைகளில் முதல் முறையை பற்றி பார்ப்போம்

முதல் முறையை

அதாவது இந்த வரிசையில் உள்ள ஒரு நம்பரை எடுத்துக்கொண்டு அதற்க்கு பின்னால் உள்ள மற்றொரு நம்பரால் வகுப்பது (DIVIDING),

அவர் எப்படி வகுத்தார் என்பதை கீழே காண்க

அந்த வரிசை



"0- 1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987"



இரண்டு இழக்க நம்பரில் இருந்து வகுக்க (DIVIDING) ஆரம்பிப்போம்

21/13 விடை = 1.61538

34/21 விடை = 1.61904

55/34 விடை = 1.61764

89/55 விடை = 1.61818

144/89விடை = 1.61797

233/144விடை=1.61805

377/233விடை=1.61802

610/377விடை=1.61803

இப்படியாக இந்த முதல் முறையில் அவர் வகுத்ததில் (DIVIDE) அவருக்கு கிடைத்த விடை சராசரியாக 1.618 ஆக இருந்தது



இரண்டாம முறை

இந்த முறை முதல் முறைக்கு நேர் எதிரான முறை ,

அதாவது அந்த வரிசையில் உள்ள ஒரு நம்பரை அதன் அடுத்த இடத்தில் உள்ள நம்பருடன் வகுப்பது (DIVIDING)

அந்த வரிசை

"0- 1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987"

அதாவது கீழ் கண்ட முறையில்

13/21 விடை = 0.61904

21/34 விடை = 0.61764

34/55 விடை = 0.61818

55/89 விடை = 0.61797

89/144விடை = 0.61805

144/233விடை= 0.61802

233/377விடை= 0.61803

377/610விடை= 0.61803

இப்படியாக இந்த இரண்டாம் முறையில் அவர் வகுத்ததில் (DIVIDE) அவருக்கு கிடைத்த விடை சராசரியாக 0.618 ஆக இருந்தது



இந்த இரண்டு வகுத்தலுக்கும் அவருக்கு கிடைத்த இரண்டு சராசரி விடைகள்

1.618 மற்றும் 0.618 ஆகும்

இந்த இரண்டு சராசரி விடைகளிலும் பொதுவானதாக .618 என்ற எண் இருந்தது ஆகவே அதை எடுத்துக்கொண்டார் ,

இப்பொழுது இந்த நம்பரை அரைகுறை நம்பராக இல்லாமல் முழு நம்பராக மாற்ற வேண்டி இதை 100 உடன் பெருக்குவோம் ,

பொதுவாக நாம் சதவிகிதங்களை 100 அடிப்படையில் தான் காண்போம் இல்லையா , ஆகவே இந்த என்னை 100 உடன் பெருக்கினால் வரும் விடை 100*.618 = 61.8 இப்படியாக கிடைத்தது ,

இந்த நம்பரானது மிக முக்கியத்துவமான அனைவராலும் கொண்டாடப்படும் GOLDEN MEAN OR GOLDEN RATIO ஆகும் ,

இந்த GOLDEN MEAN நம்பரை தான் (61.8%) நாம் TECHNICAL ANALYSING இல் FIBONACCI RETRACEMENT LEVEL இல் மிக முக்கியமானதாக பார்க்கின்றோம்

மேலும் இந்த GOLDEN MEAN NUMBER OR GOLDEN AVERAGE NUMBER ஐ பற்றி நான் இங்கு கொஞ்சமாவது சொல்லியே ஆகவேண்டும்

இந்த நம்பரானது நமது வாழ்க்கையில் நீக்கமற நிறைந்த ஒரு MAGICAL நம்பர் ஆகும் ,

எப்படி என்று பார்ப்போம் வாருங்கள், இந்த விஷயம் ஒரு சுவாரசியமான விஷயம் கூட ,

மேலும் அனைத்தையும் சொல்லமுடியாததால் 1 , 2 ஐயாவது சொல்கிறேன்

மீதியை பின்னால் ஒரு பதிவில் சொல்கிறேன்

இப்பொழுது இந்த 61.8% என்ற MAGICAL நம்பர் எப்படி நமது பூமியில் உள்ளது என்று பார்ப்போம்

நமது பூமி அதிக அளவு நீரினாலும் , குறைந்த அளவு நிலத்தினாலும் ஆனது ,

அது உங்கள் அனைவருக்கும் தெரியும் , ஆனால் இந்த நீரின் அளவு கிட்ட தட்ட 61.8% என்ன ஆச்சரியமாய் இருக்கா

அடுத்து நம்மை வைத்தே ஒரு உதாரணம் பார்ப்போம் ,

உங்களது முழு உயரத்தை அளந்து கொள்ளுங்கள் , அந்த உயரத்தில் கிட்ட தட்ட 61.8% உயரத்தில் நமது முக்கியமான உறுப்புகள் அமைந்துள்ளது,

பெண்களுக்கு அவர்களின் மொத்த உயரத்தில் 61.8% உயரத்தில் தான் தாய்மை அடையக்கூடிய கர்ப்ப பை உள்ளது,

இப்படியே இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்,

இப்பொழுது FIBONACCI அவர்களின் SERIAL NUMBER களின் முக்கியத்துவத்தை பற்றியும் பார்ப்போம்

உதாரணமாக நமது கைகளை எடுத்துக்கொள்ளுங்கள்

நமக்கு 2 கைகள் அதில் 5 விரல்கள் , அந்த 5 விரல்களிலும் 3 அடுக்குகள், இவ்வாறு நிறைய சொல்லலாம்

இன்னும் பார்க்க வேண்டும் என்றால் இந்த LINK CLICK செய்து பாருங்கள்,

http://www.mcs.surrey.ac.uk/Personal/R.Knott/Fibonacci/fibnat.html#fingers

காய், கனி, செடி கொடிகளில் பூ இவைகளில் எல்லாம் எப்படி FIBONACCI NUMBER கள் அமைந்துள்ளது என்று அறிந்து கொள்ளலாம்

இவளவு விஷயங்கள் நமக்கு தேவை இல்லை தான் , இருந்ததாலும் இந்த FIBONACCI NUMBER எவ்வளவு முக்கியமானது என்று காட்டுவதர்ர்க்காக சொல்ல வேண்டி ஏற்ப்பட்டது ,

சரி நாம் நம் விசயத்திற்கு வருவோம்

இந்த FIBONACCI இன் GOLDEN MEAN புள்ளியான 61.8 ஐ நாம் TECHNICAL ANALYSING இல் FIBONACCI RETRACEMENT LEVEL கள் என்ற பெயரில் பயன்படுத்துகிறோம்,

மேலும் இதனுடன் 23.6%, 38.2%, 50%, 76.4%, போன்ற அளவுகளையும் பயன் படுத்துகிறோம் ,

இந்த அளவுகள் எப்படி வந்தது என்பதனையும் பார்த்துவிடுவோம்

இந்த 38.2 இல் 61.8% = 23.6

இந்த 61.8 ஐ 100 உடன் கழித்தால் கிடைப்பது = 38.2

இந்த 23.6 ஐ 100 இல் கழித்தால் வருவது = 76.4

இந்த 68.1 உடன் 23.6 ஐ கூட்டினால் வருவது = 85.4



ஆகவே நாம் பயன் படுத்தும் FIBONACCI RETRACEMENT LEVEL களின் மொத்த வரிசையை பார்ப்போம்

61.8% of 32.8 = 23.6%

100-61.8 = 32.8%

PSYGOLOGICAL USE = 50%

GOLDEN NUMBER = 61.8%

100 - 23.6 = 76.4%

23.6 + 61.8 = 85.4%

அனுபவத்தில் = 89%



(சைக்காலஜியாக நாம் எப்பொழுதும் முழு, அரை (1, ½) ஆகியவைகளை பயன் படுத்துவோம் இல்லையா , அந்த வகையில் 50% மும் முக்கியமானதே)



மேற்கண்ட அனைத்து அளவுகளையும் நாம் FIBONACCI RETRACEMENT LEVEL களில் பயன்படுத்துகிறோம் ,

இந்த அளவுகள் வந்த விதத்தை பார்த்துவிட்டோம் ,

இப்பொழுது இந்த அளவுகள் உலக சந்தைகளின் வரை படங்களில் எப்படி அமைந்துள்ளது என்று கீழ் கண்ட படங்களை பாருங்கள் , படத்திலேயே அதன் அளவுகளை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன் ,

இந்த FIBONACCI அளவுகளை படத்தில் "0" என்ற குறிக்கப்பட்ட கோட்டில் இருந்தது ஆரம்பித்து , "100" என்ற குறிக்கப்பட்ட இடத்தில் முடித்துள்ளேன், இந்த இடைப்பட்ட உயரங்களுக்கான FIBONACCI RETRACEMENT அளவுகள் எந்த எந்த இடங்களில் வருகிறது என்று பாருங்கள்,

அந்த இடங்களில் இப்பொழுது நடந்து வரும் உயர்வுகள் தடை நிலைகளை சந்திக்கலாம் ,

இந்த 0 மற்றும் 100 என்ற புள்ளிகளானது, இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் உயர்வுக்கு முன் நடந்த வீழ்ச்சிஇன் தொடக்கப் புள்ளியில் இருந்தும் ,

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் உயர்வு எந்த புள்ளியில் இருந்து ஆரம்பம் ஆனதோ அந்த புள்ளியில் இருந்தும் கணக்கிடப்பட்டுள்ளது

உங்கள் கவனத்திற்கு

1. தெரியாத தொழிலை செய்யக்கூடாது

2. மொத்த வருமானத்தில் 5 ல் ஒரு பங்கு சேமிக்க வேண்டும்

3. செல்வதிலும் எளிமை

4. பதவியலும் பணிவு

5. கோபத்திலும் பொறுமை

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்

1. சாந்தமாகப் பேசுங்கள்

2. ரசித்து நடந்து செல்லுங்கள்

3. சுவையாக சாப்பிடுங்கள்

4. ஆழ்ந்து சுவாசியுங்கள்

5. போதுமான நேரம் உறங்குங்கள்

6. பயமின்றி செயல்படுங்கள்

7. பொறுமையாகப் பணிசெய்யுங்கள்

8. உண்மையாக இருங்கள்

9. சரியானவற்றை மட்டுமே நம்புங்கள்

10. நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்

11. எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்

12. சரியாகத் திட்டமிடுங்கள்

13. நேர்மையோடு சம்பாதியுங்கள்

14. தொடர்ந்து சேமியுங்கள்

15. சமத்தாகச் செலவு செய்யுங்கள்

16. எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள்

17. குறைவின்றி வாழ்வீர்கள்.


இவைதான் மகிழ்ச்சியான வாழ்விற்கான தாரக மந்திரங்கள்!

பணவீக்கம்? எளிமையான விளக்கம்!

பணவீக்கம் என்றால் என்ன ?
ஏதாவது ஒன்று ஊதிப் பெருப்பதையோ, குண்டாவதையோ இன்ஃப்ளேஷன் என்று கூறுவோம். பொருளாதாரத்தில் இதற்கு இரண்டு பொருள் உண்டு. எல்லாப் பொருள்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை ஏறிவிடுவது... அல்லது பணத்தின் புழக்கம் அதிகரிப்பது. அதனால்தான், அதற்குப் பணவீக்கம் என்று பெயர். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், பணத்தின் புழக்கம் அதிகம் ஆகும் போது, அதன் மதிப்புக் குறைந்து போகிறது என்பதுதான். தேவைக்கு அதிகமாக ஒரு விஷயம் கிடைக்குமென்றால், அதன் மதிப்பு சரிந்துவிடுவது இயல்புதானே!

பணப்புழக்கம் அதிகமாக இருக்குமானால், மக்களின் கையில், பர்ஸ§களில், வங்கிக் கணக்குகளில் பணம் அதிகமாக இருக்குமானால், அவர்கள் செலவழிக்கத் தொடங்குவார்கள். மேன்மேலும் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அதனால், அவற்றின் விலைகள் உயரத் தொடங்கும். பொருள்கள் மற்றும் சேவைகளின் இந்தப் பொதுவான விலை மாற்றத்தைத்தான் பணவீக்கம் என்கிறோம்.

எடுத்துகாட்டாக இப்போது இந்தியாவின் பணவீக்கம் 7 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சில பொருள்கள் மற்றும் சேவைகளின் தொகுதியின் மதிப்புக் கூட்டிய சராசரி விலை (வெயிட்டட் ஆவரேஜ் பிரைஸ்) சென்ற ஓராண்டில் 7% அதிகரித்திருக்கிறது. இந்த ‘மதிப்புக் கூட்டிய சராசரி’ என்ற வார்த்தைகளைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம் போதும். ஒரு கூடை பழங்களின் விலை, சென்ற ஆண்டு 100 ரூபாயாக இருந்து, இந்த ஆண்டு 110 ரூபாய். ஆக விலையேற்றம் பெற்றிருந்தால், கடந்த ஓராண்டில் அதன் பணவீக்க விகிதம் 10%.

பணவீக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது ?
வீட்டுக்கு வீடு, பொருள்களின் முக்கியத்துவம் மாறுபடும். இந்த முக்கியத்துவத்தைத்தான் ஒவ்வொரு பொருளோடும் சேர்க்கப்படும் ‘வெயிட்’ என்று சொல்கிறோம். மத்திய புள்ளியியல் துறை, மக்கள் மத்தியில் சில கணக்கெடுப்புகளை நடத்தி, ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கக்கூடிய ‘வெயிட்டை’ அளவிடுகிறது. விலை மாற்றத்தோடு இந்த வெயிட்டையும் பெருக்கினால் கிடைப்பதே வெயிட்டட் சராசரி விலை மாற்றம். பணவீக்கம் இதனடிப்படையில்தான் அளவிடப்படுகிறது.

பணவீக்கம் என்பது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
பணவீக்கம் ஏழைகளை பாதிக்கக்கூடியது. ஏழ்மையானவர்களும் மத்தியதரக் குடும்பங்களும் அரிசி, கோதுமை, பால், மீன், காய்கறிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகத்தான் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகின்றன. இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைகள் ஏறுமானால், அது ஏழ்மையானவர்களையே அதிகம் பாதிக்கும்.

அரசு எப்படி இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தும்?
இதற்கு, பணவீக்கத்தின் பொருளாதார அர்த்தத்தைப் பார்த்துவிடுவோம். உபரியாகப் புழங்கும் பணம்தான், பொருள் மற்றும் சேவைகளின் தேவையை அதிகப்படுத்திவிடும். அதனால், அரசு பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை உயர்த்துவதன் மூலம், ரிசர்வ் வங்கி இதைச்செய்ய முயற்சிக்கிறது. வட்டிவிகிதங்கள் உயரும்போது, மக்கள் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவார்கள். அதோடு, அந்தப் பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பார்கள். அதன்மூலம் சேமிப்பு உயரும்.
------------
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகள், வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. ஏழைகளின் வாங்கும் சக்தியை பணவீக்கம் குறைத்துவிடுமென்றால், அந்தவகை உயர் வளர்ச்சிக்கு அர்த்தமே இல்லை. பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டுமென்றால், ரிசர்வ் வங்கியை சுதந்திரமாக தனித்தன்மையுடன் இயங்க அனுமதிக்கவேண்டும்.

அரசு, பொறுப்புடன் செலவுகளை மேற் கொள்ளவேண்டும். அதேசமயம், பொருளா தாரத்தில், தேவையும் உற்பத்தியும் சம அளவு பெருகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதை எல்லாம் இந்திய அரசு புரிந்துகொண்டுள்ளது. அதனாலேயே, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தப் பணவீக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

கச்சா எண்ணையும், பங்கு வர்த்தகமும்

உலகின் மிகப்பெரிய எண்ணெய் செலவழிக்கும் நாடு அமெரிக்கா. அதே போல உலகெங்கும் இருக்கும் எண்ணெய் வளங்களை எப்படியாவது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 'தாதா' நாடும் கூட. ஆனாலும் அந்த நாட்டில் சந்தையில் விற்பனையாகும் எண்ணெய் விலையை அரசு நேரடியாக தலையிட்டு நிர்ணயம் செய்வதில்லை. 'தேவை - உற்பத்தி' சமன்பாட்டின் படி ஆயில் கம்பெனிகள் அதை முடிவு செய்கின்றன. இருப்பினும் குடியரசுக் கட்சியைத் தங்களது சட்டைப் பையில் போட்டு வைத்திருக்கும் இந்தக் கம்பெனிகள் 'நம்ம ஆட்கள் ஜெயிக்கட்டும், பிறகு பாத்துக்கலாம்' என்று தற்காலிகமாக விட்டுப் பிடிப்பதாகச் சொல்கிறார்கள்.

மேற்கொண்டு பேசுவதற்கு முன் கச்சா எண்ணெய் விலை எப்படி நிலவி வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது நலம். 1978 ஆம் வருடம் ஒரு பேரல் $15 க்கு விற்ற கச்சா எண்ணெய் 2002 வருடம் கிட்டத்தட்ட அதே அளவிலேயே இருந்தது; இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கூட. அதன் பிறகு உலகலாவிய அளவில் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டது. இந்த வளர்ச்சியை சீனா முன்னின்று நடத்திச் சென்றது. கடந்த 25 ஆண்டில் சராசரியாக 9% பொருளாதார வளர்ச்சியை அந்த நாடு ஏட்டியது. இந்தியாவும் சளைக்காமல் கூடவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை தொடர்ந்து நிலைநாட்ட நம்மைப் போன்ற நாடுகள் அதிகரித்த எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டி வந்தது. அதன் காரணமாகவும் உலக எரிபொருள் தேவை சீராக உயர்ந்தது.

தேவை ஒரு பக்கம் உயர, இன்னொரு பக்கம் உற்பத்தியில் பல சிக்கல்கள் உண்டாயின. கடந்த ஆண்டுகளில் அமெரிக்க மெக்சிகோ வளைகுடாவைத் தாக்கிய சூறாவளி அங்கே செறிந்திருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைச் சேதப்படுத்தியது. ஈராக் யுத்தம், ஈரானில் பதட்டம், வெனிசுலா விவகாரம் ஆகியவையும் உடன் சேர்ந்து கொண்டன. கோடை காலத்தில் சகட்டு மேனிக்கு கார் ஓட்டுகிற மேலைநாட்டு வழக்கம் தேவையை மேலும் கூட்டியது. போதாக் குறைக்கு கச்சா எண்ணெய் டிரேடிங் செய்பவர்கள் எரிகிற எண்ணையில் எண்ணெய் வார்த்து போலியாக உயர்த்தினார்கள்.

இப்படியெல்லாம் ஏறிப்போன கச்சா எண்ணைய் ஒரு பேரல் 75 டாலரில் இருந்து மீண்டும் கீழிறங்கி வந்திருக்கிறது. தேர்தல் விளையாட்டுகள் அதன் தொடர்ச்சியாகவே அமெரிக்காவில் தென்படுகின்றன. அரசியல் காரணங்களைத் தாண்டி நோக்கினால் நிஜமாகவே நிலையான எண்ணெய் விலை இறங்கி வந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பழுதுபட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் பல மறுபடியும் இயங்கத் தொடங்கியதும், தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி உயர்ந்ததும், போலியாக விலையோடு விளையாடும் ஹெட்ஜ் ·பண்ட்கள் தாங்கள் வாங்கி வைத்திருந்த முதலீடுகளை எல்லாம் விற்று சரிவை மேலும் தீவிரமாக்கியதும், ஏறுவது எல்லாமே இறங்கித்தான் தீர வேண்டும் என்ற இயற்கை விதியும் ஒன்று சேர்ந்து கூட விலையைக் கீழே இழுத்திருக்கலாம்.

சர்வதேசக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். அதைக் கடந்து நம்மை, நமது நாட்டை, நமது நிறுவனங்களை, பங்குச்சந்தையை கச்சா எண்ணைய் விலை எப்படிப் பாதிக்கிறது என்பதே நமக்கு முக்கியமானதாகும். இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை நிர்ணயிக்கும் பெருங்காரணியாக பெட்ரோல் விலை உள்ளது. போக்குவரத்துச் செலவு, உணவுப் பொருட்களின் விலை, மூலப்பொருடகளுக்கான செலவு என எல்லா முனைகளிலும் பெட்ரோல் விலையேற்றம் பாதகமான விளைவுகளையே உருவாக்கும். அதனால் செலவுகள் கூடி நிறுவனங்களின் இலாப விகிதம் மந்தமடையும். இலாபம் குறைவதால் புதிய முதலீடுகள், விரிவாக்கம், வளர்ச்சி போன்றவை தடைபட்டுப் போகும். ஆகவே, பங்குச் சந்தையில் முதலிடப்படும் தொகை வற்றும், பங்குச்சந்தை முடங்கும். இந்த லாஜிக்கையெல்லாம் புறந்தள்ளி விட்டு இந்தியப் பங்குச்சந்தை சென்ற மூன்றாண்டுகளாக கச்சா எண்ணெய் விலையை விட வேகமாக வளர்ந்தது.

இதற்கு ஒரு வகையில் மூலமாக அமைந்தது அரசின் தலையீடு. சர்வதேச சந்தையில் என்ன விலைக்கு வாங்கினாலும் உள்நாட்டில் சில்லறை விலை இதற்கு மேல் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டின் காரணமாக ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் நட்டத்தை ஏற்றுக் கொண்டு வாடிக்கையாளருக்கு குறைவான தொகைக்கே வழங்கின. இதனால் மற்ற துறைகளின் எரிபொருள் செலவு ஏறவில்லை. இலாபத்தை பழைய அளவிலேயே பேண முடிந்தது. இந்தச் சுமை யாவும் இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பத்து ரூபாய் மானியம், நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு என இந்தியன் ஆயில் நிறுவனம் இயங்கியது. நல்ல வேளையாக, இப்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இது போன்ற ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் மறுபடியும் தம் பிடிக்க ஆரம்பித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தாலும் அதற்கு ஏற்ப சில்லறை விலை இறங்காது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏன் தெரியுமா? பெட்ரோல் விற்பனையில் லேசான இலாபம் வந்தாலும், இன்னமும் சமையல் எரிபொருள் போனவற்றுக்கு அளிக்கும் மானியத்தால் இந்த நிறுவனங்கள் நட்டத்தில்தான் இயங்குகிறதாம்.

மானியம் வழங்கி வழங்கியே கூறு கெடுவதால் இந்த ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளை முதலீட்டாளர்கள் ஒதுக்கி வைப்பது உண்மையே. கடந்த ஓரிரு ஆண்டுகளில் அவற்றின் விலை இதையே பிரதிபலிக்கிறது. ஆயினும், 2002-03 சமயத்தில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றவாறு சில்லறை விலையை மாற்றும் சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது. அப்போது இந்த நிறுவனங்களின் பங்கு விலை அமோகமாக வளர்ந்தது. இந்தியன் ஆயில் 300 சதவீதத்திற்கும் மேல் ஏறியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எதற்காக பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்குக் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுகிறார்கள்? இந்தியாவில் அரசுத் தலையீட்டில் எரிபொருள் விலை கட்டுக்குள் இருப்பினும், உலக அளவில் அப்படியில்லை. கச்சா எண்ணெய் விலை மூலப்பொருட்களின் விலையை ஏற்றும், அதன் மூலம் எல்லாப் பொருட்களுக்கும் விலைவாசி உயரும், பணவீக்கம் பெருகும், வட்டி வீதம் அதிகரிக்கும், பணம் அரிதாகப் போகும்......என்ற கணிப்புகளின் படி பங்குச்சந்தையில் இருந்து பணம் வெளியேறி பங்குச்சந்தைக் குறியீட்டைச் சரிய வைக்கும். இந்தப் பணம் இந்தியப் பணம் மட்டுமல்ல. உலகின் பிற பகுதிகளிலும் இருந்து இங்கே முதலிட்டவர்கள் விற்க ஆரம்பித்ததும் குறியீடு படுத்து விடுகிறது.

இதற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை குறைந்தால், அது எல்லாப் பொருட்களின் விலையையும் குறைக்கும். உலகெங்கும் பணம் தாராளமாகப் புழங்க ஆரம்பிக்கும். அதன் ஒரு பகுதி இந்தியச் சந்தையிலும் பாயும். குறியீடு மேல் நோக்கிப் போகும். இதெல்லாம் பொதுவான விதிகள். விதிகள் என்றால் அவற்றோடு சில விதி விலக்குகளும் கூடவே இருக்கும். அவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.

நமது இந்திய எரிபொருள் தேவையில் முக்கால்வாசி இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. நமது மொத்த இறக்குமதியில் சுமார் 25 சதவீதம் பெட்ரோல் பொருளுக்காக மட்டுமே ஒதுக்குகிறோம். கடந்த எட்டு வருடத்தில் இதற்கான அந்நியச்செலவாணி செலவு ஒன்பது மடங்கு கூடியிருக்கிறது. இது FY - 2006 இல் ஏழு இலட்சம் கோடிக்கு மேல். இறக்குமதி அதிகமாகிக் கொண்டே போவதால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியை அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் மூலம் வழங்கும் மானியமும் நாட்டின் வலுவைக் குலைக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதை ஈடுகட்டுவதற்கு அரசு வேறு ஏதாவது வழியில் மக்களிடம் இருந்தோ அல்லது நிறுவனங்களிடம் இருந்தோ வரியாகப் பெறும். ஏற்றுமதிப் பற்றாக்குறை FY - 2005 ஐ விட FY - 2006 இல் நான்கு மடங்காகி இருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து அதில் வரும் பணத்தில் இந்த ஏற்றுமதிப் பற்றாக்குறையை (current account deficit) நிவர்த்தி செய்யலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இது நாட்டைக் கூறு போட்டு விற்பதாக முடியும் என உள்நாட்டுப் பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

இப்போது சர்வதேசச் சந்தையில் விலை இறங்கினால் அரசு ஆனந்தமாக உணரும். முன்பே சொன்னது போல ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளுக்கும் மகிழ்ச்சி. இதற்கு நேர் மாறாக உள்நாட்டில் பெட்ரோல் கிணறு தோண்டி எடுக்கும் ஓ.என்.ஜி.சி.யைப் பார்க்கிறார்கள். உலகச் சந்தையில் விலை என்னவாக இருந்தாலும் இந்த நிறுவனத்தின் உற்பத்திச் செலவு இந்தியாவில் அதே அளவு தானே இருக்கும்? இருந்தாலும் சர்வதேச விலைக்கு இணையாக இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு எண்ணெய் விற்று பெரும் இலாபம் ஈட்டியது. சென்ற சில வருடங்களில் இதன் பங்கு விலை அமோகமாக ஏறியதற்கு இதுவே காரணமாகும். அதைக் கவனித்த அரசாங்கம், "இனி நீங்களும் மானியத்தில் பங்கு போட வேண்டும்" எனப் பணித்து விட்டது. அதன் தொடர்ச்சியாக சர்வதேசச் சந்தையில் விலை மாற்றம் எப்படி இருந்தாலும் ஓ.என்.ஜி.சி. மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

சந்தையில் சில்லறை விற்பனையாகும் எரிபொருள் விலையில் எந்தவொரு மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பது உண்மையாக இருக்கிற பட்சத்தில், சர்வதேசச் சந்தையில் தற்போது குறைந்துள்ள கச்சா எண்ணெய் விலை நமது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த விதமான அனுகூலமும் உருவாக்கவில்லை என்பதே நிஜம். ஆனால் அரசாங்கமும், ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளும் சற்று இளைப்பாற ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவர்கள் இளைப்பாறினால் இன்னொரு முறை நம்மைத் தாங்கிப் பிடிப்பதற்கான ஆற்றலைக் கூட்டிக் கொள்வார்கள். நல்லது தான். ஒரு வேளை சர்வதேச விலை இதற்கும் கீழே போனால் அதன் பயன்பாடு வாடிக்கையாளர்களுக்கு வந்து சேரும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன.

சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தாலும் நமது அரசாங்கம் சில்லறை விலையைக் குறைக்கவில்லை என்று குறை சொல்லாமல், சர்வதேசச் சந்தையில் விலை ஏறிய போது அதே வேகத்தில் இவர்கள் ஏற்றவில்லை என்பதில் மனதில் கொள்வோம். பதினைந்து வருடங்களுக்கு முன்பு இரண்டு வாரப் பெட்ரோல் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலவாணியைத் தவிர ஏதும் இல்லாததால் நமது தங்கத்தை பேங்க் ஆ·ப் இங்கிலாந்தில் அடமானம் வைத்த நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது நாம் எத்தகைய வியத்தக முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பது புரியும்.

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

முதலீடு என்றவுடன் எடுத்த எடுப்பிலேயே கன்னாபின்னா லாபமெல்லாம் தேவையில்லை! கிடைப்பது கொஞ்சமாக இருந்தாலும், நான் போடும் ஆரம்ப முதலே..., 'ஆடி காற்றில் அடிச்சுட்டு போச்சு!' என்பது போல மொத்த முதலுக்கும் பங்கம் வராமல் இருந்தால் சரி!'' என்று சொல்லும் நபர்களுக்கான ஒரு முதலீட்டு... சேமிப்பு திட்டம் தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் பலரிடம் பரவலாக்கப்படுவதால், தனியருவர் சந்திக்க நேரும் ரிஸ்க் இதில் குறைகிறது. அவ்வளவு தான்.

அதாவது, நாம் மேலே சொன்னது மாதிரியான நபர்கள் பலர் சேர்ந்து, அவர்களால் முடிந்த தொகையை மொத்தமாக திரட்டி, அந்த தொகையை பங்குசந்தை பற்றி விபரம் தெரிந்த நிபுணர்களிடம் கொடுத்து, அவர்கள் மூலமாக பங்குகளில் முதலீடு செய்வது. அதே போல, சரியான நேரம் பார்த்து நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் அந்த பங்குகளை விற்றுவிடுவது. இப்படியான தொடர் நடிவடிக்கைகளில் இடையில் கிடைத்த மொத்த லாபத்தையும் சேர்த்து, ஆரம்ப முதலீடு போட்ட அத்தனை நபர்களும் பகிர்ந்து கொள்வது. இது தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்.

இந்த திட்டத்தின் ஆரம்பத்தில், யார் எவ்வளவு பணம் போட்டார்களே, அந்த அளவுக்கு அவர்களுக்கு லாபம் உறுதியாகிறது. ஒரு வேளை இந்த பணத்தில் வாங்கிய எதாவது ஒரு பங்கில் சிக்கல் ஏற்பட்டு அது விலை குறைய நேர்ந்தால், அதனால் ஏற்படும் மொத்த நஷ்டமும் அந்த திட்டத்தில் முதலீடு செய்த எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதால் தனியருவர் சந்திக்க வாய்ப்புள்ள பெரிய பாதிப்புகளை தவிர்க்க முடிகிறது.

இந்த மாதிரி திட்டத்தின் சாதக அம்சம் இது மட்டுமல்ல: இன்னும் பலவகையான லாபங்களும் உண்டு. ஒரு சிறு முதலீட்டாளர் தனியாளாக முதலீடு செய்யும் போது, அவர் செய்யும் முதலீட்டுத் தொகை மிகப் பெரிய தொகையாக இருக்க வாய்ப்புகள் குறைவு. எனவே நல்ல லாபம் தர வாய்ப்புள்ள, நம்பகமான கம்பெனிகளின் பங்குகள் சந்தையில் அதிக விலைக்கு விற்கும்போது, அதில் தேவையான அளவு எண்ணிக்கையில் வாங்க முடியாமல் போகலாம். ஆனால், பல சிறு முதலீட்டாளர்களின் பணம் ஒரே இடத்தில் திரட்டப்பட்டு, அது ஒரு பெரும் தொகையாக மாறும் போது, அதைக் கொண்டு விரும்பிய எண்ணிக்கையில் பங்கு வாங்க முடியும்.

இன்னொரு பக்கம்_ இப்படி நிறைய பங்குகள் வாங்கி, அதை நிபுணர்கள் கொண்டு நிர்வகிக்கும்போது, அதற்கான நிர்வாகச் செலவுகளையும் பலரும் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் மியூச்சுவல் ஃபண்ட்களில் தனி நபருக்கான செலவு குறைகிறது.

இப்படியாக பலர் ஒன்றாக சேர்ந்து முதலீடு செய்து அதிக லாபம் பெறவும், ரிஸ்கைக் குறைத்துக் கொள்ளவும் பரஸ்பரம் உதவிக் கொள்வதால்தான் இந்த திட்டத்தை தமிழில் ''பரஸ்பர நிதி திட்டம்'' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

அத்துடன், ஒரு தனிநபர் தனது சேமிப்புப் பணத்தை எங்கே லாபகரமாக முதலீடு செய்யலாம் என்பது குறித்த ஆராய்ச்சிக்காக செலவழிக்கும் நேரம், உழைப்பு போன்றவை இந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மிகக்குறைவுதான். இதுபோக அனுபவம் உள்ள நிபுணர்களின் கண்காணிப்பும், பராமரிப்பும் நமது பணத்துக்கு கிடைக்கிறது என்பது கூடுதல் அனுகூலம். அதோடு இந்த நிபுணர்களுக்கு என நாம் மிகப் பெரும் தொகை எதையும் கூட செலவழிக்க தேவையில்லை.

இப்படி பல அணுகூலங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் உண்டு. அத்துடன் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பல வகைகளும் உண்டு. அதனால், 'பங்குகளில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க்கே எனக்கு தேவையில்லை' என நினைப்பவர்கள் பங்குகள் சாராத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கும் மியூச்சுவல் ஃபண்டில் வழிகள் உண்டு. அரசுக் கடன் பத்திரங்கள், பிறவகையான கடன் திட்டங்கள் என ரிஸ்க் குறைவான திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் நிறையவே இருக்கின்றன.

இன்றைக்கு இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்கள் பல்வேறு மாறுதல்களுக்குள்ளாகி, நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளது. இதனால் மற்ற பல வகையான முதலீடுகளை ஒப்பிடும்போது இந்த வகையான முதலீடுகளில் நிறைய அனுகூலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவை:

1. நுட்பம் தெரிந்த திறமையாளர்களின் நிர்வாகம்.

2. ஒரே இடத்தில், திசையில் முடங்கிப் போகாமல், பல வழிகளில், துறைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு.

3. கண்காணிப்பதும், நிர்வகிப்பதும் எளிது, குறைந்த நேரம் செலவிட்டால் போதும்.

4. அதிக லாபத்துக்கான வாய்ப்பு.

5. குறைந்த நிர்வாகச் செலவு.

6. நினைத்தபோது மீண்டும் காசாக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

7 திரட்டிய தொகை எங்கே முதலிடப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை.

8 விரும்பியபோது ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்திற்கு மாறிக்கொள்ளும் எளிய வாய்ப்பு.

9. தேர்ந்தெடுக்க ஏராளமான திட்டங்கள்.

10. ஏராளமான வரிச்சலுகைகள்.

11. அதிக நம்பத்தன்மை (செபி போன்ற அமைப்புகளின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால்).

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் வரலாறு.

இந்தியாவில் பங்குச்சந்தை தொடங்கியது 1875_ல்! ஆனால் இந்திய அரசு இதற்கு, சட்டப் பூர்வமான அங்கீகாரம் கொடுத்து முறைப்படுத்தியது, 1965_ல்தான். எனினும் பங்குச்சந்தை முதலீட்டின் இன்னொரு வடிவான மியூச்சுவல் ஃபண்ட் 1963_லேயே முளைவிடத் தொடங்கி விட்டது. இந்திய அரசின் முன் முயற்சியால்தான் இது தொடங்கப்பட்டது. அப்போது, இதற்காக ‘யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (யூ.டி.ஐ)’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். மத்திய அரசின் ஆசிர்வாதத்தோடு, இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கிய இந்த அமைப்புக்கு, பாராளுமன்றத்தில் சட்டமியற்றி, தனி அந்தஸ்தும் வழங்கப்பட்டது. ரிசர்வ் வங்கி தவிர, வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ, கட்டாயமோ இல்லை என்ற சிறப்புச் சலுகை பெற்ற இந்த யூ.டி.ஐ., 1964_ல் தனது முதல் திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து பணம் திரட்டியது.

10 ரூபாய் மதிப்பு கொண்ட தனித்தனி யூனிட்களாக வழங்கி, முதலீடு திரட்டிய இந்தத் திட்டம் _ அறிமுகமான ஆண்டின் பெயரிலேயே ‘யூனிட் ஸ்கீம் 64’ என பெயரிடப்பட்டது. சுருக்கமாக யூ.எஸ்.64! யூ.டி.ஐ. நிறுவனத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல் சில ஆண்டுகளுக்கு முன் வெளியுலகுக்கு வந்தது. இதனால் இந்நிறுவனம் மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்ததுடன், யூ.எஸ்.64 யூனிட்களின் மதிப்பு வீழ்ச்சி கண்டது. இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவானது.

அதற்கு சில ஆண்டுகள் முன்புவரை யூ.டி.ஐ. ஒரு கோயில் மாடு! ரொம்பப் புனிதமான இமேஜ். யாரும் எளிதில் விமர்சனம் செய்யத் துணிவதில்லை. அதேபோல, லாபகரமாகவும் இருந்து, பணம் போட்டவர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்து வந்தது என்பது வேறு கதை.

இப்படி மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு பிள்ளையார் சுழி போட்டு, இந்தியாவில் அதைத் தொடங்கி வைத்த யூ.டி.ஐ., 1978_ல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது. ‘இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இன்னொரு நிதி நிறுவனம் யூ.டி.ஐ.யை தத்து எடுத்துக் கொண்டது. 1987 வரை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் யூ.டி.ஐ.தான் தனிக்காட்டு ராஜா! மருந்துக்குக் கூட, எதிர்க்கடை கிடையாது. அந்த நேரத்தில் யூ.டி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த பணம் கிட்டத்தட்ட 6700 கோடி!

இந்தப் போக்கில் மாற்றம், 1987_ல் தொடங்கியது. இந்திய பொதுத்துறை வங்கிகளும், இன்ஷ¨ரன்ஸ் நிறுவனங்களும் கூட மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவதில் ஆர்வம் காட்டினர். அந்த ஆண்டு ஜூன் மாதம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ தனது மியூச்சுவல் ஃபண்டைத் தொடங்கியது. எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் என்ற பெயரில், இது தொடங்கிய ஆறே மாதத்தில், அதாவது டிசம்பரில் கனரா பேங்க் ‘கேன் பேங்க்’ மியூச்சுவல் ஃபண்ட்’ என்ற பெயரில் தனது இளவலை களத்தில் இறக்கியது. இப்படித் தொடங்கிய வளர்ச்சி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. நாட்டின் மிக முக்கிய இன்ஷ¨ரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி., தன் பங்குக்கு துண்டு போட்டு இடம் பிடித்தது, 1989 ஜூனில்! அடுத்து பஞ்சாப் நேஷ்னல் பேங்க் மியூச்சுவல் ஃபண்ட், 1989 ஆகஸ்டில்... இந்தியன் பேங்க் மியூச்சுவல் ஃபண்ட் நவம்பரில்... பேங்க் ஆஃப் இந்தியா ஜூன் 1990ல்...

உயிர்காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பங்கு கொள்ளும்போது, தானும் களமிறங்கினால் என்ன என்று எண்ணியதோ என்னவோ! ஜி.ஐ.சி. என குறிப்பிடப்படும், உடமைகளுக்கான காப்பீட்டுத் துறையில் இயங்கி வந்த ‘ஜெனரல் இன்ஷ¨ரன்ஸ் கார்ப்பரேஷன்’ எனப்படும் பொதுக்காப்பீட்டு நிறுவனமும் அந்த ஆண்டு டிசம்பரில் தனது மியூச்சுவல் ஃபண்டைத் தொடங்கியது. ஒரே நேரத்தில், பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாமல் தனியாளாய் பயணித்துக் கொண்டிருந்த யூ.டி.ஐ., இப்போது கடுமையான போட்டியைச் சந்தித்தாக வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. அந்த நேரத்தில் பேங்க் ஆஃப் பரோடா தனது மியூச்சுவல் ஃபண்டை அக்டோபர் 1992_ல் தொடங்கியது. அடுத்த ஓராண்டில் எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் சேர்ந்து சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு திரட்டியிருந்தன.

இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார கொள்கைகளில் மாற்றங்கள் தொடங்கியிருந்தன. பிரதமர் நரசிம்மராவ் தலைமையில் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கின் மேற்பார்வையில் புதிய மாற்றங்கள் தலையெடுக்கத் தொடங்கியிருந்தது. மற்ற பல வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோலவே இந்தியாவிலும் தனியாரின் கட்டுப்பாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட பல விஷயங்களும் தொடங்க ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியது.

இதன் பலனாய், மூன்றாவது கட்ட வளர்ச்சி! பொதுத்துறை வங்கிகளும், அரசு சார்ந்த இன்ஷ¨ரன்ஸ் நிறுவனங்களும் அதிகாரம் செய்து வந்த துறையில், ஸ்மார்ட்டாக ‘டை’ கட்டிக் கொண்டு மற்றவர்களும் கால் வைக்கத் தொடங்கினார்கள்.

கதவை அகலமாகத் திறந்துவிடுவது என்றானதும், யார் வேண்டுமானாலும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, சில கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டியிருந்தது. அதனால் அப்போது பங்கு முதலீட்டு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வந்த செபியின் மூலம் புதிய வரவுகளுக்கு சில வரையறைகள் விதிக்கப்பட்டன. எல்லாரும் இந்த அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து கொண்டு அதன்பிறகுதான் பணியைத் தொடங்க அனுமதிக்கப்பட்டார்கள். யூ.டி.ஐ. தவிர, இந்தத் துறையில் ஏற்கெனவே இயங்கி வந்தவர்களும் இதில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

அதன்படி பதிவு செய்து கொண்ட முதல் தனியார் துறை மியூச்சுவல் ஃபண்ட் சென்னையில் இருந்து இயங்கிய ‘கோத்தாரி பைனியர் மியூச்சுவல் ஃபண்ட்’தான். 1993 ஜூனில் இது பதிவு பெற்றது. அதையடுத்து இன்னும் நிறைய ஃபண்ட்கள் பதிவு பெற்றன. முதலீடு திரட்டின. ஆனால் தனியார் துறை காலெடுத்து வைத்த கொஞ்ச காலத்திலேயே நடந்த ஒரு சம்பவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை மணியடித்தது.

மார்கன் ஸ்டான்லி என்ற பெயரில் தொடங்கிய ஒரு வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட் தனது முதல் வெளியீடு மூலம் பணம் திரட்டியபோது, அதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சில இடங்களில் விண்ணப்பங்கள் கூட கிடைக்கவில்லை. அதனால் விண்ணப்பம் கிடைத்தவர்கள் பலரும் அதில் கூடுதலாக பணத்தைப் போடத் தொடங்கினர். இறுதி நாளுக்குப் பிறகு கணக்குப் பார்த்தால் _ மார்கன் ஸ்டான்லி எதிர்பார்த்ததுபோல, பல மடங்குப் பணம் திரண்டிருந்தது. ஆனால் துரதிருஷ்டம் அந்த யூனிட் விற்பனைக்கு வந்தபோது அதன் மதிப்பு கணிசமாகக் குறைந்திருந்தது. அதீத ஆர்வம்... எதிர்பார்ப்போடு முதலீடு செய்த பலரும் ஆடிப் போனார்கள். பொதுத்துறை நிறுவனங்களை விட, ‘தனியார் துறை இங்கே சாதனைகள் நிகழ்த்தும்’ என்று வீராப்புப் பேசிய பலரது வாயை அடக்க நடந்த சம்பவம் போல இது அமைந்தது. அதன்பிறகு இந்தத் துறையில் கால் பதித்த இன்னும் பல நிறுவனங்கள் குறித்து கண்மூடித்தனமான நம்பிக்கைகள் வைப்பதில் அர்த்தம் இல்லை என்பது உறுதியானது.

அதேபோல, சிறு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த செபியும் தனது முந்தைய வரையறைகளைத் திருத்தி, 1996_ல் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தது. அதன்பின் இன்னும் பல வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட்களும் இந்தியாவில் கடை திறக்கத் தொடங்கினார்கள். இன்னொரு புறம் ஏற்கெனவே இங்கே கடை விரித்திருந்த பலரும் இனி தொடர்ந்து தனியாக இயங்குவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து தங்களது நிறுவனங்களை மொத்தமாக மற்றவர்களுக்கு விற்பது... அல்லது அவர்களுடன் இணைந்து செயல்படுவது... என தங்களது பாதையை மாற்றியமைத்துக் கொண்டார்கள். சிலர் தாங்களாகவே முன்வந்து தங்களது போக்கை... திட்டத்தை மாற்றியமைத்துக் கொண்டது போல, மாற்றியமைத்தே ஆக வேண்டும் என்ற பரிதாப நிலையை யூ.டி.ஐ. எட்டியிருந்தது. அப்போது அதன் யூ.எஸ்.64 போன்ற சில யூனிட்களின் மதிப்பை செயற்கையாக தூக்கி வைத்திருந்தது. இதனால், யூ.எஸ்.64ன் மதிப்பு அதன் மதிப்பு குறைந்திருந்தபோதும், தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கி அதை பாதாளத்துக்குத் தள்ளிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால் யூ.டி.ஐ.யின் வேர்கள் செல்லரித்துப் போய் ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.

அந்த வகையில், ரொம்பவே ஆடி அடங்கியபின் 2003 ஜனவரியில் இந்தத் துறையில் மொத்தம் 33 மியூச்சுவல் ஃபண்ட்கள் இருந்தன. அவை மூலம் திரட்டப்பட்டிருந்த மொத்த பணத்தின் அன்றைய மதிப்பு 1 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல்! இது தவிர யூ.டி.ஐ. மட்டும் தனியாக சுமார் 44 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான மதிப்பில் யுனியட்களை விற்றிருந்தது.

2003 பிப்ரவரியில் இந்தத் துறையின் அடுத்த முக்கிய நடப்பு தொடங்கியது. அதாவது, இந்தியா இத்துறையின் முதல் நிறுவனமான, 1963_ல் தொடங்கிய யூ.டி.ஐ.க்கு அப்போது தரப்பட்ட சிறப்பு அந்தஸ்து வாபஸ் ஆனது. இதற்காக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் திரும்பப் பெறப்பட்டது. அத்துடன் அந்த நிறுவனம் அன்று கண்டிருந்த கணிசமான நஷ்டத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருந்தது. எனவே இனி எந்த ஒரு தனி நிறுவனத்துக்கும் எவ்விதத்திலும் சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்ந்து, இனி யூ.டி.ஐ.யையும் மற்ற நிறுவனங்கள் போலவே சமமான அந்தஸ்தில் வைக்க முடிவு செய்தனர். அதனால் யூ.டி.ஐ. இரண்டு அமைப்புகளாக பிரிக்கப்பட்டது. முதலாவது அமைப்பை, பழைய அதே பெயரில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா என்று குறிப்பிட்டார்கள். யூ.எஸ்.64 மற்றும், அதுபோல் ‘உறுதியான வருவாய்க்கு உத்திரவாதம்’ தரப்பட்ட ஒரு சில திட்டங்கள் மட்டும் இதன் கீழ் ஒதுக்கப்பட்டது. ஜனவரி 2003 கணக்குப்படி 29835 கோடி மதிப்பிலான யூனிட் திட்டங்கள் இதன் கீழ் இருக்கும் என பிரிக்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட இன்னொரு அமைப்பிற்கு ‘யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட்’ என்று பெயரிட்டார்கள். மற்ற மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு செபி குறிப்பிடும் வரையறைகள் அனைத்தும் இந்தப் புதிய அமைப்புக்கும் பொருந்தும் என்றும் முடிவானது. அத்துடன் 2000_ம் ஆண்டின் மார்ச் மாத கணக்குப்படி 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இந்தப் புதிய அமைப்பின் கீழ் வரும் என்று முடிவு செய்யப்பட்டது. இது மத்திய அரசின் நடவடிக்கைப்படியானது. ஆனால் புதிதாகத் தொடங்கிய சில தனியார் மியூச்சுவல் ஃபண்ட்களிலும் பிரச்னைகள் தலையெடுத்ததால் அங்கும் ஒரு அதிர்வுக்குப் பிறகு தரை நிரவப்பட்டதில், செப்டம்பர் 2004 இறுதியில் இந்தியாவில் மொத்தம் 29 மியூச்சுவல் ஃபண்ட்கள்தான் என்ற நிலை உருவானது. அவை வழங்கிய 421 திட்டங்களின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடிக்கும் சற்று கூடுதலான மதிப்பில் யூனிட்கள் விற்பனையாகி இருந்தன. இது, மார்ச் 2006 இறுதியில் 37 பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட்கள் எனவும் அவற்றின் மூலம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 862 கோடி ரூபாய் மதிப்புக்கு யூனிட்கள் விற்பனையாகியுள்ளன என்ற நிலைக்கும் மாறியுள்ளது.

இந்தியாவில் பதிவு பெற்று செயல்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்கள்:

1. ஏ.பி.என். அம்ரோ மியூச்சுவல் ஃபண்ட்

(2. அல்லயன்ஸ் கேப்பிடல் மியூச்சுவல் ஃபண்ட். 2005 செப்டம்பர் மாதத்தில் இது பிர்லா சன்லைப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதன் திட்டங்கள் பெயர் மாறின)

3. பென்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்ட்

4. பிர்லா சன்லைப் மியூச்சுவல் ஃபண்ட்

5. பி.ஓ.பி. மியூச்சுவல் ஃபண்ட்

6. கேன்பேங்க் மியூச்சுவல் ஃபண்ட்

7. டி.பிஎஸ் சோழா மியூச்சுவல் ஃபண்ட்

8. டச் மியூச்சுவல் ஃபண்ட்

9. டிஎஸ்பி மெரில்லின்ச் மியூச்சுவல் ஃபண்ட்

10. எஸ்கார்ட்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்

11. பிடிலிட்டி மியூச்சுவல் ஃபண்ட்

12. பிரங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட்

13. ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட்

(14. ஜிஐசி மியூச்சுவல் ஃபண்ட். 2005 அக்டோபர் மாதத்தில் இது கேன்பேங்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதன் திட்டங்கள் பெயர் மாறின)

15. ஹெச்எஸ்பிசி மியூச்சுவல் ஃபண்ட்

(16.ஐஎல்&எஃப்எஸ் மியூச்சுவல் ஃபண்ட். 2004 ஜூலை மாதத்தில் இது யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதன் திட்டங்கள் பெயர் மாறின.)

17. இந்த் வைஸ்யா மியூச்சுவல் ஃபண்ட்

18. ஜே.எம் ஃபைனான்ஸியல் மியூச்சுவல் ஃபண்ட்

19. கோடக் மஹேந்திரா மியூச்சுவல் ஃபண்ட்

20.எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட்

21. லோட்டஸ் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்

22. மார்கன் ஸ்டான்லி மியூச்சுவல் ஃபண்ட்

(23. பிஎன்பி மியூச்சுவல் ஃபண்ட். 2004 ஏப்ரல் மாதத்தில் இது பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன மடியில் வீழ்ந்தது. இதன் திட்டங்கள் புதிய பெயரைப் பெற்றன)

24. பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட்

25. ப்ரொட்ன்ஷியல் ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட்

26. குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட்

27. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்

28. சஹாரா மியூச்சுவல் ஃபண்ட்

29. எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்

30. ஸ்டாண்டர்ட் சார்டட் மியூச்சுவல் ஃபண்ட்

(31. சன் எஃப் & சி மியூச்சுவல் ஃபண்ட். 2004 மே மாதத்தில் இது பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கைக்கு மாறியது. இதன் திட்டங்கள் புதிய நாமகரணம் பெற்றன)

32. சுந்தரம் பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட்

33. டாடா மியூச்சுவல் ஃபண்ட்

34. டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட்

35. யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்

(36. ஸ¨ரிச் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட். 2003 ஜூனில் இதை ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் வாங்கிவிட்டது. ஏற்கெனவே இருந்த திட்டங்கள் புதிய பெயருக்கு மாறிக் கொண்டன)

Wednesday, August 19, 2009

மும்பை பங்குச் சந்தை தரும் இலவச மென்பொருள்!

மும்பை பங்குச் சந்தை மார்க்கெட் வாட்ச் என்ற பெயரில் பங்குச்சந்தை மதிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளது.இதை நமது கணினியில் நிறுவியவுடன் கணினியின் முகப்புத்திரையில் இந்த மெனபொருள் தோன்றும். இதன் வழியே மூலம் மும்பை பங்குச்சந்தையில் பங்குகளின் விலைப்பட்டியலையும், செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள முடியும்.

இதன் முக்கிய சிறப்பம் என்னவெனில் நமக்கு வேண்டிய பங்குளை மட்டும் பார்க்கும்படியும் இம்மென்பொருளை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு

http://bseindia.com/gadget/gadget.asp

கோடீஸ்வரராக ஒரு மந்திரவார்த்தை!

கோடீஸ்வரராக ஒரு மந்திரவார்த்தை!

ஒரு மந்திர வார்த்தை சொல்லித் தருகிறோம்... அதை ஒருமுறை உச்சரித்தால் போதும்... நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்! என்ன அந்த மந்திர வார்த்தை என்ற பரவசம் பொங்குகிறதா... இதோ குறித்துக்கொள்ளுங்கள்...

திட்டமிடல்!


'உங்கள் முதல் சம்பளத்தில் எத்தனை ரூபாயைச் சேமிப்புக்கு ஒதுக்கினீர்கள்?' என்று நாற்பதைக் கடந்த வயதில் இருக்கும் பலரிடம் கேட்டால், எத்தனை பேரிடம் உறுதியான, தெளிவான பதில் இருக்கும்? குத்துமதிப்பாகக் கூடச் சொல்லமுடியாமல் தடுமாறுபவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்.
போனது போகட்டும்... இனியாவது தெளிவாகத் திட்டமிடுவோம்.
வருமானம் எவ்வளவு... செலவு எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியும்
சூழ்நிலையில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் எவ்வளவு ஒதுக்கி வைக்கவேண்டும் என்பதையும் தீர்மானித்தாக வேண்டும். இன்றைக்கு முப்பது வயதில் இருக்கும் ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது என்றால் அந்தக் குழந்தையைக் கல்லூரியில் சேர்க்கும்போது அவருக்கு ஐம்பதை நெருங்கும் வயதாகி இருக்கும். அன்றைக்கு லட்சங்கள் தேவைப்படும் என்றால் எங்கே போகமுடியும். இப்போதே திட்டமிட்டுக்கொள்ளலாம் அல்லவா!


அதற்கான முயற்சிதான் இது.


ஒற்றை வரியில் திட்டமிட வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லமுடியாது. ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமாக திட்டமிட வேண்டும். எந்த வயதுப் பிரிவினருக்கு எந்த அளவு ஒதுக்கீடு என்பதை வைத்துதான் அவருடைய எதிர்காலம் சுகமான பயணமாக அமைய வழிகாட்ட முடியும்.


உதாரணமாக, 25 வயதில் உள்ளவர் அதிக ரிஸ்க் எடுக்கமுடியும். அதனால், ரிஸ்க் உள்ள பங்குச் சந்தையில் அதிக முதலீடுகளைச் செய்யமுடியும். இப்போது இழந்தாலும் அதனை மீண்டும் சம்பாதிக்கும் திறனும், வயதும் உள்ளது. அதுவே 55 வயதுள்ளவர் இந்த ரிஸ்க்கை எடுக்கமுடியாது. இதுவரை சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பாகவும் அதேசமயம் ஓரளவு வருமானம் உள்ள திட்டமாகவும் தேர்வு செய்யவேண்டும்.


வெறுமே இந்தத் திட்டத்தில் இந்த அளவு பணத்தை போட்டு வையுங்கள் என்று பொத்தாம் பொதுவாக வழிகாட்டாமல், முதலீட்டில் உள்ள ரிஸ்க், அதில் கிடைக்கக்கூடிய ரிட்டர்ன், அது குறைந்தால் முதலீட்டுத் திட்டமிடலை மாற்றிஅமைக்க வேண்டிய விதம் என்று சகல திசைகளிலும் வழிகாட்டுகிறார் மகாதேவன்.
திட்டமிடுதலுக்கு முன்னரே சில விஷயங்களை நாம் செய்து முடித்திருக்க வேண்டும். அதில் முக்கியமானது இன்ஷ¨ரன்ஸ்.


அடிப்படைத் தேவையான டேர்ம் பாலிசிகளும் மெடிக்ளைம் பாலிசிகளும் எடுத்துக்கொண்ட பிறகு அதற்குச் செலவிடும் பிரீமியத் தொகை போக, மீதமுள்ள தொகைக்குத்தான் நிதித் திட்டமிடலைச் செய்யவேண்டும்.


இந்தத் திட்டமிடல் பட்டியலைப் படித்து முடிக்கும்போது, இருப்பதிலேயே அதிக ரிட்டர்ன் தரக்கூடிய முதலீடான ரியல் எஸ்டேட் பற்றிச் சொல்லப்படவே இல்லையே என்று தோன்றலாம். ஆனால், மாதாமாதம் முதலீடு செய்யும் வகையில் சொல்லப்படும் இந்த நிதித் திட்டமிடலில் ரியல் எஸ்டேட் முதலீட்டைச் சேர்க்க வழியில்லை. அது மொத்தமாகச் செய்யப்பட வேண்டிய முதலீடு. எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் மியூச்சுவல் ஃபண்ட் வரும்போது அதில் முதலீட்டைச் செய்து பயன் அடையலாம்.


ஒருவர் 25 வயதில் முதலீடுகளை ஆரம்பித்துவிடுவது நல்லது. அப்போதிலிருந்து சிறிய தொகையைச் சேமித்தாலே அதிக வருமானத்தைப் பெறமுடியும். அதுவே 35 வயதில் தொடங்கினால் ரிஸ்க் கொஞ்சம் அதிகரிக்கும். கிடைக்கும் தொகையும் குறைவாகவே இருக்கும். அதுவே 45 வயதில் தொடங்கினால் முதலீட்டுக்கலவையில் கடன் திட்டங்களே அதிக சதவிகிதம் இடம் பிடிக்கும். அதனால் அதிக வருமானம் கிடைப்பது அரிதாகிவிடும்.


அடுத்ததாக ஒரு முதலீட்டுக்கலவையைத் தேர்வு செய்துவிட்டு அதையே காலம் முழுவதும் வைத்திருக்கக்கூடாது. சிலசமயம் சில முதலீடுகள் எதிர்பார்த்த அளவு வருமானத்தைக் கொடுக்காமல் இருக்கலாம். அப்போது நிதி ஆலோசகர்களுடன் துணையுடன் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, இந்த முதலீட்டுப் பழக்கத்தை தொடரவேண்டும். மாதா மாதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது சந்தையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் முதலீட்டைப் பாதிக்காது. மேலும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு எளிதாகவும் இருக்கும்.


மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சேமிக்கமுடியும் என்பவருக்கான முதலீட்டு திட்டம் இது! பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடன் திட்டங்கள், கமாடிட்டி என கலந்து செய்வதால் ரிஸ்க் பரவலாக்கப்படுகிறது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வருமானம் 25, 35, 45 வயதில் இருக்கவேண்டிய முதலீட்டுக் கலவை சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது. 8


ஈக்விட்டி முதலீடுகள்

அதிக வருமானம் தரும் ஈக்விட்டி முதலீடுகள். பங்குச் சந்தையில் நேரடியாக ஈடுபடுவதைவிட பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வது நல்லது. 300&க்கும் மேற்பட்ட பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சராசரியாக முப்பது சதவிகிதத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் கொடுக்கும் திட்டங்கள் பல இருக்கின்றன. அவற்றில் முதலீடு செய்யும் அளவை வயதுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.


25 வயதில் ஆரம்பிக்கும்போது 45 சதவிகிதமாகவும், அதுவே 35 வயது வரும்போது முதலீட்டை 40 சதவிகிதமாகவும் முதலீடு செய்ய வேண்டும். அதுவே 55 வயதாகும்போது 30 சதவிகிதமாகக் குறைத்துக்கொள்வது நல்லது.


கடன் திட்டங்கள்

கடன் திட்டங்களில் வங்கி டெபாசிட்கள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், அரசு கடன் பத்திரங்கள் என பல உள்ளன. இவை மிதமான ரிஸ்க் உள்ளவை. எனவே முதலீட்டில் ஒருபகுதியை இதுபோன்ற மிதமான ரிஸ்க் உள்ள திட்டங்களிலும் செய்வது நல்லது.


வயது குறைவாக இருக்கும்போது கடன் திட்டங்களில் குறைவான சதவிகிதமும், வயது அதிகமாகும்போது அதிக சதவிகிதமும் முதலீடு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.


கமாடிட்டி

தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வதும் அவசியம். தங்கத்தை நகைகளாகவோ அல்லது நாணயங்களாகவோ முதலீடு செய்யலாம். இவற்றின் வருமானம் குறைவு என்றாலும் எளிதாக விற்று பணமாக்கும் வசதி இருக்கிறது. இதுதவிர, தங்கத்தில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்தியாவில் வந்துவிட்டன. இவற்றிலும் முதலீடு செய்யலாம். இவை நேரடியாகத் தங்கத்தை வாங்குவதை விட பாதுகாப்பானது. இந்த வசதிகள் எல்லாம் இருந்தாலும் முதலீட்டை எப்போதும் பத்து சதவிகிதமாக வைத்துக்கொள்வது நல்லது.


கோடீஸ்வரர் ஆக வாழ்த்துகள்!


குறிப்பு: பங்கு சார்ந்த திட்டங்களின் எதிர்கால வருமானம் பற்றி உறுதியாகச் சொல்லமுடியாது. முந்தைய செயல்பாட்டின் அடிப்படையில் 15% என்ற பாதுகாப்பான அளவிலேயே கணக்கிடப்பட்டுள்ளது.

கடன் திட்டங்களில் வரி எடுத்துக்கொள்ளப்படவில்லை. வரிவிதிப்பு தனிநபர் வருமானத்துக்கு ஏற்ப மாறுபடும்.

இதில் கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களின் வருமானம் அனைத்தும் கடந்த காலத்தில் கொடுத்துள்ளவை. இதுவே வரும் காலத்திலும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே திட்டங்களைத் தேர்வு செய்யும் முன் நிதி ஆலோசகர்களைக் கலந்து உங்களுக்கு ஏற்ற முதலீடுகளாகத் தேர்வு செய்வது நல்லது.

வாரன் பபெட்டின் - விதிகள்

1. Don’t gamble.
2. Buy securities as cheaply as you can. Set up a “margin
of safety.”
3. Buy what you know. Remain within your “circle of competence.”

4. Do your homework. Try to learn everything important
about a company. That will help give you confidence.
5. Be a contrarian—when it’s called for.
6. Buy wonderful companies, “inevitables.”
7. Invest in companies run by people you admire.
8. Buy to hold and buy and hold. Don’t be a gunslinger.
9. Be businesslike. Don’t let sentiment cloud your judgment.
10. Learn from your mistakes.
11. Avoid the common mistakes that others make.
12. Don’t overdiversify. Use a rifle, not a shotgun.

From J.K. LASSER’S PICK STOCKS LIKE WARREN BUFFETT

புத்தகங்கள்

Alexander, Colin, Street Smart Guide to Timing the Stock Market, McGraw-Hill,
New York, 1999.
Arnold, Curtis M., Timing the Market: How to Profit in Bull and Bear Markets with
Technical Analysis, Revised Edition, McGraw-Hill, New York, 1995.
Baer, Gregory A., and Gary Gensler, The Great Mutual Fund Trap: An Investment
Recovery Plan, Broadway Books, New York, 2002.
Bulkowski, Thomas N., Encyclopedia of Chart Patterns, Wiley, New York, 2002.
Colby, Robert W., The Encyclopedia of Technical Market Indicators, Second Edition,
McGraw-Hill, New York, 2003.
Dorsey, Thomas J., Point and Figure Charting: The Essential Application for
Forecasting and Tracking Market Prices, Second Edition, Wiley, New York,
2001.
Ferri, Richard A., Jr., All About Index Funds: The Easy Way to Get Started, McGraw-
Hill, New York, 2002.
Harding Sy, Riding the BEAR: How to Prosper in the Coming Bear Market, Adams
Media Corporation, Holbrook, MA, 1999.
Headley, Price, Big Trends in Trading: Strategies to Master Major Market Moves,
Wiley, New York, 2002.
Hirsch, Yale, and Jeffrey A. Hirsch, Stock Trader’s Almanac 2003, The Hirsch
Organization Inc., Old Tappan, NJ, 2002.
Lloyd, Humphrey E.D., The RSL Market Timing System: How to Pinpoint Market
Turns in Mutual Funds, Futures, and Options, Windsor Books, Brightwaters,
NY, 1991.
McDonald, Michael, Predict Market Swings with Technical Analysis, Wiley, NY,
2002.
Merriman, Paul, and Merle E, Dowd, Market Timing with No-Load Mutual Funds,
Backwater Books, Mercer Island, Washington, 1985.
Merriman, Raymond, The Ultimate Book on Stock Market Timing: Cycles and
Patterns in the Indexes, Seek-It-Publications, West Bloomfield, MI, 1997.
Murphy, John J., Technical Analysis of the Futures Markets, New York Institute of
Finance, New York, 1986.
O’Neil, William J., How to Make Money in Stocks: A Winning System in Good or Bad
Times, Mc-Graw-Hill, New York, 2002.
Pring, Martin J., Technical Analysis Explained, Fourth Edition, McGraw-Hill, New
York, 2002.
Sosnowy, John K., Lasting Wealth Is a Matter of Timing, 21st Century Publishers,
Cheyenne, WY 1997.
Zweig, Martin, Martin Zweig’s Winning on Wall Street, Warner Books, New York,
1986

பங்குவர்த்தகம் சூதாட்டமா?

பல நேரங்களில், சந்தையின் போக்குப் பற்றி புரிபடாமல் போகும் பொழுது பங்கு வர்த்தகத்தை சூதாட்டம் என்று சொல்கிறார்கள். சந்தையைப் பற்றி அறியாதவர்களுக்குத் தான் அதன் போக்கு புரிபடாமல் போகும். பங்குச் சந்தை சூதாட்டமாக தெரியும்.

சீட்டுக்கட்டு போன்ற ஒரு சூதாட்டத்ததில் கூட சீட்டுக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாதவர்களால் அதில் வெற்றி பெற்று விட முடியுமா என்ன ? அதில் வெற்றி பெறக் கூட சீட்டுக்கட்டுப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சீட்டுக்கட்டு விளையாடும் பொழுது, நமக்கு வரும் சீட்டில் ஜோக்கர் உள்ளதா, ரம்மி சேருமா என்று முதலில் சோதிப்போம். ரம்மி சேரக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே விளையாடுவோம். இங்குமங்குமாக பல எண்கள் இருந்தால் சீட்டைக் கீழே வைத்து விட்டு, அதற்கு தரப்படும் 20புள்ளிகளை சந்தோசமாக வாங்கிக் கொண்டு, நம் பக்கத்தில் இருப்பவர் முழுப் புள்ளிகளும் வாங்க வேண்டுமென வேண்டிக் கொள்வோம். சீட்டுக் கட்டில் ஜோக்கர் இருந்து ரம்மி சேரும் வாய்ப்பு இருந்தால் மேற்கொண்டு விளையாடுவோம். விளையாட ஆரம்பித்து நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் பாதியிலேயே விலகிக் கொண்டு அதனால் கிடைக்கும் குறைந்தப் புள்ளிகளை பெற்றுக் கொண்டு, 80ல் இருந்து தப்பித்து, கூடிய வரையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறி விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். அது மட்டுமின்றி எதிராளி எந்த சீட்டுகளை எடுக்கிறார்கள், என்பதைக் கொண்டு அவர்களுக்கு ரம்மி சேர்ந்து விடாதவாறு சீட்டுகளை இறக்குவோம். இதுப் போன்ற பல நுட்பங்களைக் கையாண்டால் தான் வெற்றி பெற இயலும்.

சீட்டுக்கட்டுப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களால் இவ்வாறு விளையாடமுடியுமா ? முதலில் தன்னிடம் இருக்கின்ற சீட்டுகளைக் கொண்டு விளையாடலாமா, வேண்டாமா என்று அவர்களால் முடிவு செய்ய இயலாது. பல நேரங்களில் விளையாடி தான் பார்ப்போமே என்று விளையாடுவார்கள். ரம்மி சேரா விட்டால் விலகி விடலாம். ஆனால் சேர்ந்து விடும் என்ற எண்ணத்திலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிறகு முழுப்புள்ளிகள் கிடைக்கும் பொழுது நொந்துப் போவார்கள். அற்புதமான சீட்டுகளே கிடைத்தாலும், அடுத்தவர்கள் சீட்டுகளை இறக்குவதை கணித்து ஆடினால் தான் வெற்றி பெற இயலும். இல்லாவிட்டால் தோல்வி தான்.

சீட்டுக்கட்டுப் போன்ற சூதாட்டங்களுக்கே இவ்வளவு நுணுக்கங்கள் தேவைப்படுகிறது.

விளையாட்டு முதல் தொழில் வரை ஒரு துறையைப் பற்றி நன்கு தெரிந்தால் தான் அதில் வெற்றிப் பெற முடியும். நம் சிறிய வயதில் கிரிக்கெட் விளையாடி இருப்போம். எந்தப் பந்து வந்தால் எப்படி அடிப்பது என்பதெல்லாம் நமக்கு தெரியாது. பந்து வந்தால் ஓங்கி ஒரே அடி. சில நேரம் பந்து பறக்கும். சில நேரங்களில் நம்முடைய ஸ்டெம்ப் பறந்து போகும். பிறகு தான் இந்தப் பந்தை தடுத்து ஆடி இருக்கலாமோ என்று தோன்றும். அடுத்த முறை அதை செயல் படுத்துவோம்.

பங்குச் சந்தைக்கும் அந்த நுணுக்கம் தேவைப் படுகிறது. பங்குச் சந்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பணம் இருந்தால் போதுமென முடிவு செய்து களத்தில் இறங்கி விடுவதால் தான் பல நேரங்களில் இழப்பு ஏற்படுகிறது. நமக்கு இழப்பு ஏற்படும் பொழுது தான் பங்குச் சந்தை சூதாட்டமாக தெரிகிறது.

பங்குச் சந்தையில் நான் முதலில் Margin Trading ல் இருந்து தான் ஆரம்பித்தேன். ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்று விடுவது தான் மார்ஜின் டிரேடிங். நான் செய்த முதல் வர்த்தகத்திலேயே, அரை மணி நேரத்தில் 1000 ரூபாய் லாபம். அடுத்தடுத்த நாட்களில் நான் செய்த சில வர்த்தகங்களும் லாபத்தில் தான் முடிவடைந்தது. கொஞ்ச நாள் என் கால் தரையில் படவே இல்லை. காற்றில் மிதந்து கொண்டே இருப்பேன். நமக்கு பங்குச் சந்தையின் நுணுக்கம் தெரிந்து விட்டது என்றே முடிவு செய்தேன். ஒரு நாள் என்னுடைய தரகர், ஒரு சிமெண்ட் நிறுவனம் இன்று லாபகரமாக இருக்குமென்றார். பேராசை யாரை விட்டது. நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவில், இது வரை 50, 100 என்று குறைந்த எண்ணிக்கையிலேயே பங்குகளை வாங்கி வந்த நான் அன்று 500 பங்குகளை வாங்கினேன். என்னுடைய மொத்த Exposure limit க்கு பங்குகளை வாங்கி விட்டேன்.
நான் எப்பொழுதும் இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற எனக்கு தெரிந்த மென்பொருள் பங்குகளில் தான் வர்த்தகம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் பேராசை, தரகரின் டிப்ஸ் நம்பி என்னை சிமெண்ட் பக்கம் இழுத்துச் சென்றது. அன்று பார்த்து சிமெண்ட் பங்குகள் சரியத் தொடங்கின. சரி, எப்படியும் விலை ஏறும் என்று எதிர்பார்த்து காத்திருந்து விட்டு நான் விற்ற பொழுது, இது வரைப் பெற்ற லாபம் அனைத்தும் காணாமல் போனது மட்டுமில்லாமல், நட்டமும் ஏற்பட்டது. பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று முடிவு செய்து கொஞ்ச நாள் சந்தையில் இருந்து ஓடி விட்டேன்.

மார்ஜின் டிரேடிங்கை எல்லா நேரங்களிலும் லாபமுடன் செய்ய முடியாது ? அதில் ரிஸ்க அதிகம். பங்கு விலை எகிறும் என நீண்ட கால முதலீட்டில் காத்திருக்கலாம். ஆனால் சில மணித்துளிகளில், சரிந்த பங்கு மறுபடியும் எகிறும் என காத்திருக்க முடியாது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து எகிறலாம். அல்லது இன்னும் சரியலாம். நான் பங்கு எகிறும் எனக் காத்திருக்க, பணம் காணாமல் போய் விட்டது. பங்கு முதலீட்டுக்கும், ஸ்பேக்குலேஷனுக்கும் வித்யாசம் தெரியாமல், முதலீட்டாளர் மன நிலையில் ஸ்பேக்குலேட் செய்து கொண்டிருந்தது தான் நான் செய்த தவறு. நம்முடைய மனநிலைக்கு ஏற்றவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். டிராவிடால் ஷேவாக் போல் ஆட முடியுமா என்ன ? அவரவர் பலத்திற்கு ஏற்றவாறு தான் ஆட வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற இயலும். முதலீட்டிற்கும் இது பொருந்தும்.

அடுத்து, நம்முடைய தரகு நிறுவனங்கள் கொடுக்கும் டிப்சை நம்புவதும் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். முதலில் எனக்கு தெரிந்த துறையில் வர்த்தகம் செய்த நான், எனக்கு ஒன்றுமே தெரியாத சிமெண்ட் துறையில் தரகர் சொன்னார் என்று வாங்கியதால் தானே நட்டம் ஏற்பட்டது. முதலீட்டில் ஆராய்வது முக்கியம். தெரியாத துறையில் கால் வைக்க கூடாது.

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது ஒன்றும் கடினமானது அன்று. ஆனால் சில நெறிமுறைகளை கையாள வேண்டும். எனக்கு உகந்த ஒரு வர்த்தக முறை மற்றவருக்கு பொருத்தமாக இருக்காது. நமக்கு உகந்த முறையைக் கையாளுவதே சிறந்தது. சாலைகளில் பைக்கில் சிலர் பல வித்தைகள் காட்டுவார்கள். வேகமாக பறப்பார்கள். இதையெல்லாம் செய்து பழக்கமில்லாத நாம் அவர்கள் செய்கிறார்களே என்று வித்தைகள் செய்தால் என்னாகும் ? உடம்பு புண்ணாகி போகும் அல்லவா ? நாம் பல நேரங்களில் நமக்கு உகந்த ஒன்றையே செய்கிறோம். முதலீட்டிலும் அதையே செய்ய வேண்டும்.

பங்கு வர்த்தகத்தில் பல முறைகள் இருக்கின்றது. சிலர் அவ்வப்பொழுது பங்குகளை விற்று லாபம் பார்ப்பார்கள். சிலர் நீண்ட கால முதலீடு செயவதே நல்லது என்று முடிவு செய்வர்கள். நமக்கு லாபம் தரும் ஒரு முறையை நமது மனநிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அடுத்தவர்களுக்கு இது தவறாக கூட தெரியலாம். அதனைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. எதுவும் இங்கு விதிமுறையாகாது.

பங்குச் சந்தைப் பற்றி அறிந்து வர்த்தகம் செய்யும் பொழுது தான் அது ஒன்றும் சூதாட்டம் இல்லை, அதன் உயர்வுக்கும் அர்த்தமுள்ளது, சரிவுக்கும் காரணமுள்ளது. அந்த சரிவுகளிலும் கூட நம் பணத்தை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள முடியும் என்பது புரிபடும்.

பணவீக்கம் என்றால் என்ன?

அது என்ன பணவீக்கம்?

பணவீக்கம் 7.38% சதவீதம் என்றால், 100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பொருளை நாம் ரூ107.38 க்கு வாங்குகிறோம் என்பது பொருள். பொருட்களின் விலை ஏறுவதால் நம்முடைய வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களின் விலைக்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தான் பணவீக்கம்.

பணவீக்கம் பல காரணங்களால் ஏற்படுகிறது

உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும்.

ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்க, ஆனால் பொருள் குறைவாக இருக்கும் பொழுது, பொருளின் விலை உயரும். மழை பொய்க்கும் பொழுது, அரிசி சரியாக சாகுபடியாகா விட்டால், அரிசி விலை உயரத் தானே செய்யும்.

இந்த நிலை தான் பணவீக்கம் எனப்படுகிறது. இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் ?.

பொருட்களின் விலை அதிகரிக்கும் பொழுது மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களை முன்பு வாங்கியதை விட குறைவாகவே வாங்குவார்கள். இதனால் பணம் செலவழிக்கப்படாமல் போகும். பணப்புழக்கம் குறையும்.

பொருட்களை வாங்குபவர்கள் குறையும் பொழுது உற்பத்தி குறையும்.

உள்நாட்டு விலை உயர்வினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயரும். அதனால் நம்முடைய உற்பத்தி பிற நாடுகளுடன் போட்டியிடமுடியாமல் நசுங்கிப் போகும். ஏற்றுமதியும் குறையும்.

நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

இத்தகைய சூழலை கணக்கிடத்தான் பணவீக்க குறியீடு பல நாடுகளின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை வாரந்தோறும் இந்த பணவீக்க விகிதத்தை வெள்ளியன்று வெளியிடும். இதனை Wholesale Price Index என்று சொல்வார்கள். எப்படி பங்குக் குறியீடு பங்குகளின் விலைக் குறியீடாக உள்ளதோ, அதைப் போன்றே விலைவாசி உயர்வுகளை கணக்கிட இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும். இந்த குறியீடு தான் 7.38% மாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இது 7.1% மாக இருந்தது.

Wholesale Price Index மூன்று குறியீடுகளை உள்ளடக்கிய பொதுவான விலைவாசிக் குறியீடு.

- உணவுப் பொருள்கள் (தானியங்கள் - Food Items), உணவு வகையைச் சாராத பொருள்கள் (Non-Food Items), தாதுப்பொருள் (Minerals) போன்றவை முதன்மை பொருட்களாகக் (Primary Articles)கொண்டு கணக்கிடப்படுகிறது.

- மின்சாரம், எரிபொருள் போன்றவற்றிற்கான தனிக் குறியீடு
- உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான குறியீடு (ஜவுளி, உலோகங்கள்)

இந்த பணவீக்க விகிதம் பங்குச்சந்தை முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும் ?

பங்குச்சந்தை முதலீடுகளில், பணவீக்கம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நீண்ட கால முதலீட்டில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியும் பணவீக்கம் உயர்வதற்கேற்ப உயரும் எனக் கருதப்படுகிறது. பணவீக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, பொருட்களின் விலை உயர்வால், ஒரு நிறுவனத்தின் மதிப்பும் அதிகமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் இது உண்மையான மதிப்பாகாது. பணவீக்கம் காரணமாக மிகைப்படுத்தி காட்டப்படுகிறது.

மோசமான பொருளாதார சூழ்நிலையில், பணவீக்கம் உயரும் பொழுது பங்கு முதலீடுகள் சுருங்கிப் போகலாம்.

நம்முடைய பொருளாதாரமும், பணவீக்கமும் எப்படி இருக்கிறது ?

பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பது கவலை அளித்தாலும் அச்சப்படும் விதத்தில் இல்லை.

வெள்ளிக்கிழமை வர்த்தகம் செய்பவர்கள், இந்தப் பணவீக்க விகிதத்தின் மேல் கவனம் வைத்து வர்த்தகம் செய்வது நல்லது. சந்தையின் எதிர்பார்ப்பை விட பணவீக்கம் அதிகரிக்கும் பொழுது சந்தை சரியும். பணவீக்கம் குறையும் பொழுது சந்தை எகிறும்.

பணம் சம்பாதிக்க சில விதிகள்

பங்குகளில் பணம் சம்பாதிக்க இரண்டே விதிகள் தான் உள்ளதாக Warren Buffett கூறுகிறார். இவர் கூறிய எளிய விதியை எப்பொழுதும் மனதில் நிறுத்தினால் வெற்றி நம் பக்கம் தான். அப்படி என்ன விதி அது.

விதி 1 : நம் பணத்தை எப்பொழுதும் இழந்து விடக் கூடாது
விதி 2 : முதல் விதியை மறந்து விடக்கூடாது

மிக எளிதான விதி, ஆனால் பின்பற்ற மிகவும் கடினமான ஒன்று.

முதலீடு செய்யும் பணத்தை மிகத் தெளிவாக ஆராய்ந்தப் பின்பே முதலீடு செய்ய வேண்டும் என்பது எல்லோரும் சொல்வது தான். ஆனால் எப்படி ஆராய்வது என்பது தான் கடினமான ஒன்று.

பலர் பல வழிகளை கையாண்டுள்ளனர். வெற்றியும் பெற்றுள்ளனர். பலர் அதைப் பின்பற்ற முயன்று தோல்வியும் கண்டுள்ளனர். அவரவர்க்கு ஏற்ற முறைகளை, நம் உள்மனது சொல்வதை ஏற்று முதலீடு செய்யும் பொழுது பலன் நிச்சயம் கிடைக்கும்.

வாரன் பப்பட் மிகக் குறைந்த விலையுள்ள பங்குகளை, ஆனால் மிகப் பலமான அடித்தளம் உள்ள நிறுவனங்களின் பங்குகளை, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Captitalization) குறைவாக இருக்கும் பொழுது தான் வாங்குவார்.

உதாரணமாக 10 கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 கோடியாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை மிகவும் குறைவாக இருப்பதாகத் தானே பொருள் (Undervalued Stocks). அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு நிச்சயம் பத்து கோடியை எட்ட வேண்டும். குறைந்தது அதன் மதிப்பை எட்டி விடும் தூரத்தில் நெருங்கும். அந்தப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்தால் பணம் பெருகும் என்றார் வாரன் பப்பட். இதைத் தான் Value Investing என்று சொல்வார்கள். இதில் பல கணக்குகள் உள்ளன. அந்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்தல், பங்குகளின் கடந்த கால செயல்பாடுகளை ஆராய்தல் என நிறைய கட்டங்களை கடந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.

இந்த முறையில் வாரன் பப்பட அடைந்த குறிப்பிடத்தகுந்த வெற்றி, அவர் .com நிறுவனங்களில் முதலீடு செய்யவேயில்லை. அந்த நிறுவனங்களின் அடித்தளம் சரியில்லை என்று கருதினார். அந்தக் கருத்தும் நிருபிக்கப்பட்டுவிட்டது

சிலர் பங்குக் குறியீடுகளில் உள்ளப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வார்கள். சிறந்த நிறுவனங்களின் பங்குகள் மட்டும் தான் பங்குக் குறியீட்டில் இடம் பெறும் என்பதால் நம்முடைய முதலீடு பெரிய அளவில் சரிந்து போகக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

அதைப் போலவே நமக்கு நன்கு அறிந்த துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் நம்முடைய முதலீடு எந்தப் போக்கில் செல்லக் கூடும் என்று நம்மால் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல், இந்திய மென்பொருள் நிறுவனங்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்படுத்தும் (அல்லது ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம்) என்பதை மென்பொருள் துறைகளில் உள்ளவர்களுக்கும், மென்பொருள் பற்றி அறிந்தவர்களுக்கும் தெரியும். தேர்தலின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளை வாங்குவதா, விற்பதா என்பதை எளிதில் தீர்மானிக்கலாம்.

மென்பொருள் துறையில் உள்ளவர்கள் Pharma பங்குகளை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கடந்த மாதம் பல மருந்துகளின் புரியாத பெயர்களைச் சொல்லி, இந்த மருந்துகளின் சந்தை விலை, அதன் தயாரிப்புச் செலவை விட மிக அதிகமாக இருப்பதாகவும், சாதாரண மக்களின் பாரத்தை குறைக்கும் பொருட்டு இதன் விலையைக் குறைக்க அரசு முயற்சி செய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகியது.

மென்பொருள் துறையில் உள்ளவர்கள், தாம் பங்குகள் வாங்கிய நிறுவனம், அந்த மருந்துகளை தயாரிக்கிறதா எனத் தெரிந்து கொள்வதற்குள் பங்குகள் விலைச் சரிந்துப் போயிருக்கும். ஆனால் அந்தத் துறையில் உள்ள ஒருவர் மிகச் சுலபமாக அதனை அறிந்திருப்பார். அதற்கேற்ப பங்குகளை விற்றிருப்பார்.

பங்கு வர்த்தகத்தில் எளிய பல வழிகளை பல வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள். நாமாக சென்று பணத்தை இழந்து, அனுபவ பாடம் கற்பதை விட இந்த விழிகளைப் பின்பற்றலாம்.

பங்கு குறியீடு - பாகம் 2

பங்குக் குறியீடுகளை இரு முறையில் உருவாக்கலாம்.

* சந்தை மூலதன நிறையிட்ட குறியீடு (Market Capitalization weighted Index)
* பங்கு விலை நிறையிட்ட குறியீடு (Price weighted Index)

சந்தை மூலதனத்தை வைத்து பங்குக் குறியீடுகளை கணக்கிடும் பொழுது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலையும் கணக்கில் எடுத்து கொள்ளப் படும்.

உதாரணமாக விப்ரோ நிறுவனத்திற்கு இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1 கோடி, ஒரு பங்கு விலை 600 ரூபாய் என்று கணக்கிடும் பொழுது, அதனுடைய சந்தை மூலதனம் (Market Capitalization) = 1 கோடி x 600 = 600 கோடி

பங்குக் குறியீடு உருவாக்கப் படும் பொழுது அந்தக் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மூலதனத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தான் அடுத்து வரும் நாட்களில் பங்குச் சந்தையின் சரிவுகளும், உயர்வுகளும் கணக்கிடப்படும். இதனை அடிப்படை சந்தை மூலதனம் (Base Market capitalization) என்று சொல்வார்கள்.

இதனைப் போன்றே பங்குக் குறியீட்டின் அடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) உருவாக்கப் படும்.

உதாரணமாக ஒரு குறியீடு

நான்கு நிறுவனங்களை இந்தக் குறியீட்டில் கொண்டு வருவோம்

இன்போசிஸ்
பங்குகள் = 100
விலை = 1000
சந்தை மூலதனம் = 100 x 1000 = 100000

விப்ரோ
பங்குகள் = 50
விலை = 500
சந்தை மூலதனம் = 50 x 500 = 25000

ONGC
பங்குகள் = 75
விலை = 600
சந்தை மூலதனம் = 75x 600= 45000

TISCO
பங்குகள் = 25
விலை = 150
சந்தை மூலதனம் = 25x150= 3750

இந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மூலதனத்தை கொண்டு ஒரு குறியீட்டின் அடிப்படை சந்தை மூலதனம் கணக்கிடப் படுகிறது.

அடிப்படை சந்தை மூலதனம் = 100000 + 25000 + 45000 + 3750 = 173750

அதனைக் கொண்டு குறியீட்டில் உள்ள பங்குகளின் மதிப்பீடு கணக்கிடப் படுகிறது.


பங்கு மதிப்பீடு

இன்போசிஸ் = 100000/173750 = 0.575539568

விப்ரோ = 25000/173750 = 0.143884892

ONGC = 45000/173750 = 0.258992806

TISCO = 3750/173750 = 0.021582734

மொத்த மதிப்பீடு = 0.575539568 + 0.143884892 + 0.258992806 + 0.021582734 = 1.0

அடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) 1000 என எடுத்துக் கொண்டால்

பங்குக் குறியீடு
1.0 x 1000 = 1000

இதன் அடிப்படையில், பங்கு விலையின் மாற்றங்களைக் கொண்டு குறியீட்டின் ஏற்றமும் சரிவும் கணக்கிடப் படுகிறது

இன்போசிஸ், விப்ரோ பங்குகளில் உயர்வும், ONGC, TISCO பங்குகளில் சரிவும் ஏற்படும் பொழுது குறியீடு மாற்றத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ?

விலை

இன்போசிஸ் = 1120
விப்ரோ = 600
ONGC = 435
TISCO = 25

இந்த விலை மாற்றத்தால் சந்தை மூலதனமும், மதிப்பீடும் மாறுகிறது.

குறியீட்டில் உள்ள ஏற்ற இறக்க நிலைகளையும் அதனால் மாறும் மதிப்பீடுகளையும், அடிப்படை சந்தை மூலதனம் மூலமாகவே கணக்கிடப் படும்.

இன்போசிஸ் = 100 X 1120 = 112000 = 112000/173750 = 0.644604317

விப்ரோ = 50x 600 = 30000 = 30000/173750 = 0.172661871

ONGC = 75 x 435 = 32625 = 32625/173750 = 0.187769784

TISCO = 25 x 25 = 625 = 625/173750 = 0.003597122

பங்குகளின் மொத்த மதிப்பீடு = 0.644604317 + 0.172661871 + 0.187769784 + 0.003597122 = 1.008633094

இப்பொழுது குறியீட்டின் நிலை ?

1000 x 1.008633094 = 1008.63

பங்குக் குறியீடு 8.63 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு தான் BSE மற்றும் NSE குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

NSE குறியீடு 50 பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் இடம் பெறும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வர்த்தக நாட்களிலும், அந்தப் பங்கு, வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தகுதிகளை பூர்த்தி செய்யும், முதல் 50 நிறுவனங்கள் மட்டுமே குறியீட்டில் இடம் பெறும்.

குறியீட்டில் இடம் பெறும் நிறுவனம் இந்தத் தகுதிகளை இழக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் குறியீட்டில் இருந்து நீக்கப்படும். பல துறையைச் சார்ந்த பங்குகளின் குழுமமாக குறியீடு உருவாக்கப் பட்டுள்ளதால் ஒரு துறைக்குள் இருக்கும் ஏற்றமும் சரிவும் இதனை பெரிதும் பாதிக்காது.

NSE ல் பல குறியீடுகள் இருக்கின்றன. இதன் S&P CNX Nifty குறியீடு தான் பொதுவான குறியீடு. அடிப்படைக் குறியீடாக 1000ல் தொடங்கி இன்று 1800ஐ தொட்டு நிற்கிறது. இந்தக் குறியீடு 1995ல் உருவாக்கப் பட்டது.

NSE ன் மற்ற குறியீடுகள்.

CNX Nifty Junior - இது CNX Nifty க்கு அடித்தபடியாக அதிக சந்தை மூலதனம் உள்ள நிறுவனங்களை உள்ளடக்கியது. இதனைப் போன்றே பல குறியீடுகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் (Sector) தனிக் குறியீடுகளும் உள்ளது. இந்தக் குறியீடுகளை கொண்டு அந்தத் துறையின் ஏற்றங்களையும் சரிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

BSE குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. இதில் இடம் பெறக் கூடிய நிறுவனங்களின் தகுதி NSE ல் உள்ளது போலத் தான். ஆரம்ப குறியீடாக 100ல் தொடங்கி இன்று 5600 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடு 1986ல் உருவாக்கப் பட்டது.

இதிலும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனிக் குறியீடு உள்ளது.
BSETECK
BSEPSU
BANKEX

இந்தக் குறியீடுகள் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் bseindia.com, nseindia.com போன்ற இணையத் தளங்களுக்கு செல்லலாம்.